ஜ.எஸ்.ஜ.எஸ். தீவிரவாத அமைப்பின் சஹ்ரானின் அம்பாந்தோட்டை பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற சந்தேகத்தின் பேரில் சி.ஜ.டி யினரால் கைது செய்யப்பட்டு கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காத்தான்குடியைச் சேர்ந்த 19 வயது இளைஞன் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு காத்தான்குடி முதலாம் பிரிவு பரீட் அகமட் வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய முகமது நபீல் யசீர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
குறித்த இளைஞரும் அவது சகோரரும் ஜ.எஸ்.ஜ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் சஹ்ரானின் அம்பாந்தோட்டை பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றனர் என சி.ஜ.டி யினரால் கைது செய்யப்பட்டு கொழும்பில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் .
இந்த நிலையில் உயிரிழந்த இளைஞன் தலையில் ஏற்பட்ட நோய் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனளிக்காது உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து குறித்த இளைஞனின் சடலத்தை உறவினர்கள் சென்று பெறுப்பேற்று இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடியிலுள்ள அவரது வீட்டிற்கு சடலம் கொண்டுவரப்பட்டு பின்னர் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM