நாடளாவிய ரீதியில் காணப்படுகின்ற கடற்றொழில்சார் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை வழங்க வேண்டிய கடப்பாடு தனக்கு இருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
கொழும்பு, மோதரை பிரதேசத்திற்கு இன்று விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், அப்பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்ற கடற்றொழில்சார் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்தார்.
இதன்போது, கடலரிப்பு மற்றும் களனி கங்கையினால் இழுத்து வரப்பட்டு மோதரை பிரதேசத்தில் கரையொதுக்கப்படும் கழிவுகளினால் ஏற்படும் சுற்றாடல் பிர்ச்சினைகள் போன்றவை பிரதேச மக்களினால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
மேலும், கொழும்பு துறைமுக நகர திட்டத்தினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களுக்கான நஷ்டஈடு வழங்குவதற்கு கடந்த அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும், அவை மோதரை பிரதேசத்தில் வாழுகின்ற சுமார் 500 குடும்பங்களுக்கு கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தினையும் பிதேச மக்கள் வெளிப்படுத்தினர்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் அவர்கள், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி முடியுமானாhல் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாக குறித்த நஷ்டஈடு கிடைப்பதற்கு முயற்சி மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
அதேபோன்று ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பது தொடர்பில் ஆராய்வதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு அமைச்சின் செயலாளர் திருமதி. இந்து ரத்நாயக்காவிற்கு பணிப்புரை விடுத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM