தேசிய ஸ்குவாஷ் சம்பியன் ஷிப் போட்டிகள் நாளை முதல் 12ஆம் திகதிவரை சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளன.
சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ள 26 ஆவது தேசிய ஸ்குவாஷ் சம்பியன்ஷிப் போட்டிகள் ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு என்று இரு பிரிவுகளிலும் நடைபெறுகிறது. அதேபோல் இரு பிரிவுகளிலும் 09,11,13,15,17 ஆகிய வயதிற்கு கீழ் உள்ள வீரர்களுக்கிடையே இப்போட்டிகள் நடைபெறவுள்ளன.
இப்போட்டிகளுக்கு தொட ர்ந்து ஆறாவது முறையாக ரிட்ஸ்பரி நிறுவனம் அனுசரணை வழங்குகின்றது. ஸ்குவாஷ் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இப்போட்டித் தொடருக்கான அனுசரணையை வழங்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் கொழும்பு ஒலிம்பிக் இல்லத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு ஸ்குவாஷ் சங்கத் தலைவர், விளையாட்டுத்துறையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் ரிட்ஸ்பரி நிறுவனத்தின் அதிகாரிகள், இச்சம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ளும் வீர வீராங்கனைகளும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய இலங்கை ஸ்குவாஷ் சங்கத்தின் தலைவர் சுரஞ்சித் பிரேமதாஸ, நாடு பூராகவும் ஸ்குவாஷ் விளையாட்டை நாம் கொண்டு செல்கிறோம். அதை அனைவரிடமும் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதே எமது முக்கிய நோக்கம். தற்போது ஒலிம்பிக்கில் ஸ்குவாஷ் பிரிவில் நாம் இல்லை. விரைவில் ஒலிம்பிக்கில் இடம்பெறவைப்போம் என்று அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM