திருச்சியில் குழந்தைகளின் ஆபாசப்படங்களை தரவிறக்கம் செய்த குற்றத்திற்காக கிறிஸ்தோபர் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இணையத்தில்; சிறுவர் சிறுமியர்களின் ஆபாசப்படங்ளை தரவிறக்கம் செய்து பார்ப்பவர்களின் எண்ணிக்கை திருச்சியிலேயே அதிகம் என அமெரிக்க அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவலை தொடர்ந்து ஆபாசப்படங்கள் குறிப்பாக குழந்தைகளின் ஆபாசப்படங்களை தரவிறக்கம் செய்து பார்ப்பவர்களை தமது கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்த காவல்துறையினர் இது தொடர்பில் திருச்சியை சேர்ந்த கிறிஸ்தொபர் என்பவரை கைது செய்துள்ளனர்.
குறிப்பிட்ட நபரின் கையடக்க தொலைபேசியை ஆராய்ந்தவேளை பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரின் கையடக்க தொலைபேசியை ஆராய்ந்தவேளை அவர் போலி பெயரில் முகநூல் ஆரம்பித்து அதில் குழந்தைகள் சிறுமிகள் தொடர்பான ஆபாசப்படங்களை பகிர்ந்துகொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அவரது முகநூலில் ஆயிரக்கணக்கான படங்களும் வீடியோக்களும் காணப்பட்டுள்ளன.
கிறிஸ்டொபர் கடந்த நான்கு வருடங்களாக இதனை செய்துள்ளதுடன் அவர் 150 பேருடன் தொடர்பில் இருந்துள்ளார்.
இவர் திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் சிறுமிகளை ஏமாற்றி படமெடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவருக்கு பல அரசியல்வாதிகளுடன் தொடர்புள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
திருச்சியில் அரசியல்வாதிகள் உட்பட 30ற்கும் அதிகமானவர்களை கைதுசெய்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM