பிரித்தானியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
பி.பி.சி, ஐ.டிவி மற்றும் ஸ்கை செய்தி ஊடகங்களினால் நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், கன்சர்வேடிவ் கட்சி பெருன்பான்மையை காட்டிலும் 86 இடங்கள் கூடுதலாக வெற்றி பெறும் என்று தெரியவருகிறது.
பிரித்தானியாவில் வாக்குச் சாவடிகளில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளில், 2017 ஆம் ஆண்டு தேர்தலை காட்டிலும் அதிகமாக வெற்றி பெற்று கன்சர்வேடிவ் கட்சி 368 எம்பிக்களை பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
தொழிலாளர் கட்சி 191 இடங்களையும், தாராளவாத ஜனநாயகவாதிகள் கட்சி 13 இடங்களையும், ஸ்காடிஷ் நேஷனல் கட்சி 55 இடங்களையும், பிரெக்ஸிட் கட்சி இந்த எந்த வெற்றியும் பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றால் அதன் மூலம் போரீஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராவார்.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான பிறிக்ஸிட் செயற்கிரமம் தொடர் பில் தீர்மானிக்கும் முக்கியத்துவம் மிக்க பொதுத் தேர்தல் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமானது.
இது அந்நாடு ஐந்து வருட காலத்திலும் குறைந்த காலப் பகுதியில் எதிர்கொள்ளும் மூன்றாவது பொதுத் தேர்தலாகும். 2015 ஆம் ஆண்டு மற்றும் 2017 ஆம் ஆண்டு தேர்தல்களைத் தொடர்ந்து இடம்பெறும் இந்தத் தேர்தல் அந்நாட்டில் சுமார் 100 வருட காலப் பகுதியில் முதல் தடவையாக டிசம்பர் மாதத்தில் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வட அயர்லாந்திலுள்ள 650 தொகுதிகளில் சர்வதேச நேரப்படி காலை 7.00 மணிக்கு ஆரம்பமான வாக்கெடுப்பு இரவு 10.00 மணிக்கு நிறைவுபெற்றது.
மேற்படி தேர்தலில் ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலிருந்தும் மொத்தம் 650 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். பிரித்தானியாவில் தேர்தல்களானது பாரம்பரியமாக ஒவ்வொரு நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவையே நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறுகிய காலத்தில் தேர்தலொன்றை நடத்துவதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
பிரித்தானியாவில் பிரதான தேர்தலையடுத்து குறுகிய காலத்தேர்தலொன்று நடைபெறுவது கடந்த பல வருட காலப் பகுதியில் இதுவே முதல் தடவையாகும்.
அத்துடன் இந்தத் தேர்தல் 1974 ஆம் ஆண்டுக்குப் பின்னர் குளிர் காலத்தில் இடம்பெறும் முதலாவது தேர்தலாகவும் 1923 ஆம் ஆண்டிற்குப் பின்னர் டிசம்பர் மாதத்தில் இடம்பெறும் முதலாவது தேர்தலாகவும் உள்ளது.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி காலக்கெடுவிற்குள் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தவறியதையடுத்து அரசியல் ஸ்தம்பித நிலையை முடிவுக்கு கொண்டு வரும் முகமாக டிசம்பர் 12 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் அழைப்பு விடுத்திருந்தார்.
அவர் ஏற்கனவே பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிவது தொடர்பான பிறிக்ஸிட் உடன்படிக்கை குறித்து நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்புக்கு அமைய பிறிக்ஸிட் செயற்கிரமத்தை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளார்.
ஆனால் தொழிற் கட்சித் தலைவர் ஜெரேமி கொர்பைனோ பிறிக்ஸிட் குறித்து புதிய சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி வருகிறார். இந்தத் தேர்தலில் பிரித்தானிய அல்லது பொதுநலவாய அல்லது வட அயர்லாந்தைச் சேர்ந்த வாக்களிக்க தம்மைப் பதிவுசெய்து கொண்ட 18 வயதுக்கு அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பிரஜைகள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM