மன்னார் மடு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உற்பட்ட பூசாரியார் குளம் கிராம மக்கள் இன்று வியாழக்கிழமை (12) காலை எதிர்ப்பு போரட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
பூசாரியார் குளம் கிராமத்தில் உள்ள மக்களுக்கு சொந்தமான பெருந் தொகையான காணிகளை அயல் கிராமமான மதீனா நகர் கிராம மக்கள் அபகரித்து வந்த நிலையிலேயே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது அப்பகுதியில் குறித்த இரு கிராம மக்களுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இப்போரட்டத்தில் வன்னி பாரளுமன்ற உறுப்பின்களான சார்ல்ஸ் நிர்மலநாதன், மற்றும் சிவமோகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடினர்.
பூசாரியார் குளம் கிராம மக்களுக்கு சொந்தமான சுமார் 150 இற்கும் அதிகமான ஏக்கர் காணியில் உள்ள காடுகள் இவ்வாறு தள்ளப்பட்டு எல்லைக்கற்கள் போடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மடு பிரதேசச் செயலாளர் குறித்த பகுதியில் காணி தொடர்பில் மேற்கொண்டு வந்த அணைத்து நடவடிக்கைகளையும் இடை நிறுத்தினார்.
இந்த நிலையில் மடு பொலிஸார் மற்றும் வன வள திணைக்கள அதிகாரிகளும் குறித்த பகுதிக்குச் சென்று காடுகள் அழிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM