மியன்மார் படையினர் இனப்படுகொலையில் ஈடுபடவில்லை என ஆங் சான் சூகி தெரிவித்துள்ளமை குறித்து கடும் கண்டனம் வெளியிட்டுள்ள ரொகிங்யா இனத்தவர்கள் அவர் தெரிவித்தது உண்மையா என்பதை உலக உரிய ஆதாரங்களுடன் மதிப்பிடும் என குறிப்பிட்டுள்ளனர்.
இனப்படுகொலை இடம்பெறவில்லை என அவர் தெரிவித்துள்ளதை உரிய ஆதாரங்களுடன் உலகம் மதிப்பிடும் என சமாதானம் மனிதஉரிமைகளிற்கான ரொகிங்யா அமைப்பின் தலைவர் முகமட் மொகிபுல்லா தெரிவித்துள்ளார்.
திருடன் ஒருவன் தான் திருடன் என்பதை ஒருபோதும்ஏற்றுக்கொள்வதில்லை, ஆனால் ஆதாரங்கள் மூலம் நீதியை வழங்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
உலகம் எங்களிடமிருந்து இனப்படுகொலைக்கான ஆதாரங்களை பெற்றுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆங் சான் சூகி பொய்சொன்னாலும் அவர் தப்ப முடியாது அவர் நிச்சயம் நீதியை எதிர்கொள்வார் உலகம் அவரிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பங்களாதேசின் குட்டுபலங் அகதிமுகாமில் உள்ள மற்றொருஅகதியான நுர் கமால் என்பவரும்; ஆங் சான் சூகியின் வாக்குமூலத்தை நிராகரித்துள்ளார்.
இராணுவம் மக்களை சுற்றிவளைத்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு கொலை செய்த பின்னர்அவர்களின்உடலிற்கு தீ மூட்டுவது இனப்படுகொலை இல்லையா என அவர் கேள்விஎழுப்பியுள்ளார்.
ஆங் சான் சூகி அவ்வாறு சொன்னால்அது சரியாகிவிடுமா எனவும் கேள்விஎழுப்பியுள்ள அவர் உலகம் இதனை ஏற்றுக்கொள்ளாது,எங்கள் மீதான சித்திரவதைகளை முழு உலகமும் பார்த்துள்ளது, எனவும் அவர்தெரிவித்துள்ளார்.
மியன்மாரிற்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டு தவறாக வழிநடத்தும் நோக்கத்தை கொண்டது முழுமையற்றது என ஆங் சான் சூகி தெரிவித்துள்ளார்.
ஹேக் சர்வதேச நீதிமன்றில் மியன்மாரிற்கு எதிரான யுத்த குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ரொகிங்யா மக்களிற்கு எதிராக அளவுக்கதிகமான படைபலம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள அவர் எனினும் மியன்மாரின் மேற்கு ரக்கைன் மாநிலத்தில் இடம்பெறும் மோதல் குழப்பமானது இலகுவில் புரிந்துகொள்ள முடியாதது என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM