(எம்.எப்.எம்.பஸீர்)
சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்வதற்கான சிவப்பு அறிவித்தல், பிடியாணையை மீளப்பெறுமாறும் அவ்வாறு மீளப்பெறும் பட்சத்தில் இலங்கைக்கு வந்து மிக் விமான கொள்வனவு விவகார விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தான் தயாராக இருப்பதாகவும் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க முன்வைத்த கோரிக்கையை கோட்டை நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.
ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வாவின் நெறிப்படுத்தலில் சட்டத்தரணி ஜி. குணரத்ன இதற்கான கோரிக்கையை நேற்று மன்றில் முன்வைத்தார். இதனையடுத்து, பிடியாணை பிறப்பிக்கப்படும் போது இருந்த நிலைமை எந்தவிதத்திலும் மாறவில்லை என சுட்டிக்காட்டிய நீதிவான் ரங்க திஸாநாயக்க அப்பிடியாணையை மீளப்பெற முடியாது எனக் கூறி சட்டத்தரணியின் கோரிக்கையை நிராகரித்தார்.
2006 ஆம் ஆண்டு மிக்- 27 ரக விமான கொள்வனவின்போது இடம்பெற்ற சுமார் 14 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி மோசடி தொடர்பில் உதயங்க வீரதுங்க சந்தேக நபராக பெயரிடப்பட்டு பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2016.10.20 ஆம் திகதி அப்போதைய கோட்டை நீதிவானாக இருந்த லங்கா ஜயரத்ன குற்றவியல் சட்டத்தின் 63 (1) அ பிரிவின் கீழ் இந்த பிடியாணையை பிறப்பித்திருந்தார்.
அதன் பின்னர், ஏற்கனவே உதயங்கவின் சட்டத்தரணியான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, கடந்த 2017.08.11 ஆம் திகதியும் பிடியாணையை மீளப்பெறுமாறு கோரிய போதும் அதனை அப்போது நீதிவான் லங்கா ஜயரத்ன நிராகரித்திருந்தார். அந்த நிராகரிப்பு உத்தரவை 2017.08.21 ஆம் திகதி அவர் பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் அப்போதிருந்த நிலைமையும் தற்போது உள்ள நிலைமையும் வேறு வேறு எனக் கூறி சட்டத்தரணி ஜி. குணரத்ன பிடி யாணையை இரத்து செய்யக் கோரிய போது, நிலைமையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்ன என நீதிவான் ரங்க திஸாநாயக்க அவரிடம் கேள்வி எழுப்பினார். குறித்த வழக்கு அரசியல் பழி வாங்கல் நோக்கில் தொடுக்கப்பட்டது என சட்டத்தரணி குணரத்ன கூறியபோது, 2016.10.20 ஆம் திகதி அப்போதைய நீதிவான் லங்கா ஜயரத்ன பிடியாணை வழங்கும்போது இருந்த நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை என சுட்டிக்காட்டிய கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க பிடியாணையை மீளப்பெற முடியாது என அறிவித்தார்.
2006 ஆம் ஆண்டு உக்ரேனிடமிருந்து இலங்கை மிக் 27 ரக போர் விமானங்கள் நான்கினை கொள்வனவு செய்திருந்தது. இந்நடவடிக்கையானது அப்போதைய ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்கவின் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் இது குறித்த ஒப்பந்தங்களும் விமானப்படையிடமிருந்து காணாமல் போயுள்ள நிலையில் இக்கொள்வனவு தொடர்பில் 14 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM