(ஆர்.யசி)
ஜப்பான் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான தற்காப்பு கடற்படை போர்க்கப்பலான "டி.டி.102 ஹருசாம் " மூன்று நாட்கள் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இன்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.
இவ்வாறு இலங்கைக்கு வருகை தந்த போர்க்கப்பலை இலங்கை கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்கப்பட்டதுடன் கப்பலின் கட்டளை தளபதி ஓஹ்சிமா டேருஹிசா இலங்கை கடற்படை கிழக்கு கடற்படை தளபதியுடன் சந்திப்புகளையும் முன்னெடுத்தார்.
இச் சந்திப்பின் போது இரு நாட்டு கடற்படை கூட்டு ரோந்து மற்றும் பயிற்ச்சி நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இலங்கைக்கு வருகை தந்துள்ள "டி.டி.102 ஹருசாம் " போர்க்கப்பலானது 151 மீட்டர் நீளமும், 4550 தொன் நிறையும் கொண்டதாக உள்ளதுடன் இக்கப்பலில் 165 அதிகாரிகள் வருகை தந்துள்ளனர்.
மூன்று நாட்கள் இலங்கையில் தரித்து நிற்கும் நோக்கத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ள இக்கப்பல் இந்நாட்களில் இலங்கை கடற்படையுடன் கூட்டு கடற்படை பயிற்ச்சிகள் மற்றும் கலை விளையாட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது, எதிர்வரும் 12ஆம் திகதி போர்க்கப்பல் இலங்கை தீவில் இருந்து தனது அடுத்த துறைமுகத்திற்கான பயணத்தை ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM