சட்ட விரோதமாக கடல் அட்டைகள் பிடித்த சந்தேக நபர்கள் கைது

Published By: R. Kalaichelvan

10 Dec, 2019 | 02:34 PM
image

மன்னார், பல்லெமுனே கடற்கரை பகுதியில் நேற்று கடற்படையினரால் நடத்தப்பட்ட சோதனையின் போது அனுமதி பத்திரம்  இன்றி கடல் அட்டைகள் பிடித்த 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற நபர்கள் கைது செய்வதற்காக கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட  நடவடிக்கை மன்னார், பல்லெமுனே கடற்கரை பகுதி மையமாக கொண்டு மேற்கொள்ளப்பட்டது. 

அங்கு, கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான படகொன்றினை சோதனை செய்த போது அதிலிருந்த  409 கடல் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலதிக விசாரணையில், மீனவர்கள் செல்லுபடியாகும் அனுமதி பத்திரம் இன்றி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 34,36,42 மற்றும் 45 வயதான மன்னார் பகுதியை சேர்ந்தவர்களாவர்.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேகநபர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய இரண்டு மீன்பிடி படகுகள் மற்றும் 409 கடல் அட்டைகள் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37