இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் - இந்திய அரசுக்கு ரவிசங்கர் கோரிக்கை

Published By: Digital Desk 4

10 Dec, 2019 | 12:34 PM
image

இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஜீ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

“இந்தியாவில் 35 ஆண்டுகளாக அகதிகளாக வாழும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.” என்று அதில் பதிவிட்டிருக்கிறார்.

இதனிடையே, இந்தியாவுக்கு பாகிஸ்தான், வங்காளதேசம் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக இருக்கும் மக்கள் அகதிகளாக வருகை தருகிறார்கள். அவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் வகையில் இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. நேற்று நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. நாளை மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08