நியூஸிலாந்தின் பிரபல சுற்றுலா ஸ்தலமான வைட் தீவிலுள்ள எரிமலை உக்கிரமாகக் குமுற ஆரம்பித்துள்ள நிலையில் அந்த எரிமலைக் குமுறலில் சிக்கி குறைந்தது ஐவர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பதின்மூன்று பேர் இறந்து இருக்கலாம் என கருதப்படுகிறது, அவர்களில் ஐந்து பேர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, மேலும் எட்டு பேர் இன்னும் தீவில் காணமல் போயுள்ளனர்.
இந்நிலையில், நியூசிலாந்து பொலிசார் இன்று செவ்வாய்க்கிழமை வைட் தீவு எரிமலையில் ஏற்பட்ட வெடிப்பு உயிரிழப்புக்கு எவ்வாறு வழிவகுத்தது என்பது குறித்த குற்றவியல் விசாரணையை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.
குறித்த எரிமலைப் எரிமலை குமுறிய வேளை சுற்றுலாப் பயணிகள் பலர் அந்த எரிமலையின் வாயை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அந்தத் தீவில் சிக்கியிருந்த 34 பேர் மீட்புப் பணியாளர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 31 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த எரிமலையின் குமுறலில் பாதிக்கப்பட்டவர்கள் நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, சீனா, மலேசியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
"வைட் தீவில் உயிரிழப்பு மற்றும் காயங்கள் ஏற்பட்ட சூழ்நிலைகள் குறித்து நாங்கள் குற்றவியல் விசாரணையைத் தொடங்குவோம் என்பதை இப்போது என்னால் உறுதிப்படுத்த முடியும்" என்று நியூசிலாந்து துணை ஆணையர் ஜோன் டிம்ஸ் திங்களன்று ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
வனாரி என அழைக்கப்படும் மேற்படி வைட் தீவானது (வெள்ளைத் தீவு) நியூஸி லாந்தில் உயிர்ப்பான எரிமலைகளைக் கொண்ட பிராந்தியமாக விளங்குகிறது.
வைட் தீவில் கடந்த காலங்களில் அநேக எரிமலைக் குமுறல்கள் இடம்பெற்ற போதும் அவற்றில் சிக்கி எவரும் காயமடைந்ததாக அறிக்கையிடப்படவில்லை. இறுதியாக அங்கு கடந்த 2016ஆம் ஆண்டில் எரிமலைக் குமுறல் இடம்பெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM