நாட்டில் சஜித் பிரேமதாசவின் அனுதாப அலை வீசிக் கொண்டிருகின்றது. அவரின் தலைமையில் பாராளு மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் அமைச்சராகி நாம் விட்டுச் சென்றுள்ள பணிகளை மீண்டும் தொடர்ந்து முன்னெடுப்போம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கான கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அட்டன் இந்திரா விருந்தகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவர் எம். உதயகுமார், பிரதி நிதிச் செயலாளர் சோ.ஸ்ரீதரன், உப தலைவர் எம். ராம், அட்டன் நகர சபை உறுப்பினர் அழகமுத்து நந்தகுமார், தேசிய அமைப்பாளர் ஜி. நகுலேஸ்வரன் இளைஞர் அணித் தலைவர் பா. சிவநேசன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். நிகழ்வில் மாற்று தொழிற்சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்து கொண்டார்கள்.
இக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகை யில், ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து நாட்டில் காபந்து அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. எந்த விதமான நிதியும் கிடையாது. பாராளுமன்றக் கூட்டத் தொடரும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நிதி இல்லாமல் எந்தவொரு அபிவிருத்தி வேலைகளையும் செய்ய முடியாது. இந்த நேரத்தில் வாக்குறுதிகளை மட்டுமே வழங்க முடியும் வேறு ஒன்றும் செய்ய முடியாது.
மலையகத்தில் அமைச்சுப் பதவி ஏற்றுள்ளவர்கள் தமது அமைச்சில் தேநீர் குடிக்கவே பணம் இல்லை என்று கூறியுள்ளார்கள். இந்த நிலையில் வீடுகளைக் கட்டிக் கொடுக்கவும், நகர சபைகளுக்கு கோடிக் கணக்கில் நிதி வழங்கவும் முடியுமா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளவும் தமது தொழிற்சங்கத்துக்கு அங்கத்தவர்களை அதிகரித்துக் கொள்ளவும் மக்கள் மத்தியில் கூறுகின்ற பொய்யான வாக்குறுதிகள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
கடந்த காலத்தில் எமக்குக் கிடைத்த நூறு நாள் வேலைத் திட்டத்தில் 300 வீடுகளைக் கட்டிக் கொடுத்தோம். இன்னும் மூன்று மாத காலத்தில் எத்தனை வீடுகள் மலையகத்தில் கட்டப் போகின்றார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம். நாடு கடன் சுமையில் இருக்கின்றது. அரசாங்கம் “வெட்”வரியைக் குறைத்துள்ளதால் 500 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. வருமானம் இருந்தால் தான் சாதாரணமாக ஒரு குடும்பத்தையே நடத்த முடியும் என்றால், நாட்டைக் கொண்டு நடத்துவதற்கு வருமானம் இல்லாமல் எதையும் செய்ய முடியுமா?
எனவே, பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகுதான் உண்மையான அபிவிருத்தி வேலைகளை செய்ய முடியும். அதுவரை யாருடைய பேச்சையும் கேட்டு மக்கள் ஏமாந்து விடக்கூடாது. ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு சஜித் மீது மக்கள் மத்தியில் அனுதாப அலை ஏற்பட்டுள்ளது. அடுத்த பொதுத் தேர்தலில் அவரது தலைமையில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். வெற்றி பெற்ற பிறகு பேரம் பேசித்தான் அமைச்சுப் பதவியை பெறுவோமே தவிரம் வெறுமனே ஆதரவு கொடுத்து மக்களை ஏமாற்றமாட்டோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM