(எம்.எப்.எம்.பஸீர்)
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சமூக கொள்ளை விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா, அடைக்களம் கோரி, விடுமுறையும் கோராது அறிவிப்பின்றி வெளி நாட்டுக்கு சென்றமை தொடர்பில், முன்னாள் சி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர மற்றும், உதவி பொலிஸ் அத்தியட்சர் பி.எஸ். திசேரா ஆகியோரிடம் எஸ்.ஐ.யூ. எனப்படும் பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவு வாக்கு மூலம் பெற்றுள்ளது.
பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வாவின் மேற்பார்வை அதிகாரியாக உதவி பொலிஸ் அத்தியட்சர் பி.எஸ். திசேராவே இருந்த நிலையில் அவரிடமும், பணிப்பாளராக ஷானி அபேசேகர இருந்த நிலையில் அவரிடமும் வாக்கு மூலங்களை பதிவு செய்துகொண்டதாக பொலிஸ் தலைமையகம் கூறியது.
சாந்த சில்வா, விடுமுறை தொடர்பில் அனுமதி பெற்றுக்கொள்ளாமல் இவ்வாறு வெளி நடடுக்கு சென்றார் என்பதை உறுதி செய்துகொள்ளவே இந்த வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM