பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தலைவராக வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
பதவியேற்ற பின்னர் ஆணைக்குழுவின் தலைமையகத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ' இந்த அரசாங்கம் சரியான அபிவிருத்தி பாதையில் மீண்டும் நாட்டை வழிநடத்தும் என்ற எதிர்பார்ப்பை மக்கள் கொண்டிருக்கிறார்கள். சிறப்பாக செயற்பட்டு அரசாங்க சேவையினர் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கீழ் எமக்கு இப்போது நல்ல தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது. மேலும் சிறப்பாக செயற்பட வேண்டும் என்று ஆணைக்குழுவையும் ஊழியர்களையும் கேட்டுக் கொள்கின்றேன். அரசாங்க சேவை ஊழியர்கள் அவர்களின் தோல்களில் கூடுதலான பொறுப்பை சுமந்து கொண்டிருக்கிறார்கள்.
பாதுகாப்பு அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் வருகின்ற தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவானது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட ஸ்மார்ட் ஸ்ரீலங்கா என்ற கோட்பாட்டின் கீழ் நாடு பூராகவும் 5ஜீ தொழிநுட்பத்தை விரிவுபடுத்தவிருக்கிறது என்று கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM