மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்திற்கு எந்த அடிப்படையில் அரச வாகனமொன்றை வழங்க முடியுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜெயக்கொடி கேள்வியெழுப்பியுள்ளார்.
அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனம் எவ்வாறு விஜித ஹேரத்திற்கு வழங்கப்பட்டதென உரிய அதிகாரிகள் தெளிவுப்படுத்த வேண்டுமெனவும் இவர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்த விடயத்தினை இவர் முன்வைத்துள்ளார்.
குறித்த அரச வாகனம் விஜித ஹேரத்திற்கு வழங்கப்பட்டிருந்தாலும் விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் வாகனத்தின் சாரதி ஏன் வாகனத்திற்குள் இருக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளிக்கவேண்டும்.
அதுமாத்திரமின்றி விபத்தின் மூலம் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்படுமாயின் பிணையில் வருவது கிட்டத்தட்ட கடினமான விடயமாகும்.
தனக்கு தெரிந்து 'நபரொருவர் அரசுக்கு சொந்தமான பஸ் வண்டியொன்றிற்கு கல்லால் தாக்கியதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டார்" எனினும் விஜித ஹேரத் சுலபமாக பிணைப் பெற்றுக்கொண்டார் என சுட்டிக்காட்டினார்.
கடந்த 30 ஆம் திகதி விஜித ஹேரத் செலுத்திய வாகனம் ராஜகிரிய பகுதியில் தொலைபேசி கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM