(ஆர்.விதுஷா)
மிரிஹான தடுப்பு முகாமில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது கையடக்கத்தொலைபேசி உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் சட்டக்கட்டுப்பாட்டாளரும் ஊடகப் பேச்சாளருமான பி.ஜி.ஜி. மிலிண்ட தெரிவித்தார்.
மிரிஹான தடுப்பு முகாமில் உள்ள வெளிநாட்டுப் பிரஜைகள் கையடக்க தொலைபேசி உள்ளிட்ட பல பொருட்களை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை காலை 11.30 மணியளவில் இந்த சோதனையினை நடத்தினர்.
சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தப்பட்ட 75 கையடக்க தொலைபேசிகளும் , 5 மடிக்கணினிகளும் 1இலட்சத்து 56 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த முகாமில் 178 வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் , அவர்களில் 55 பேர் நைஜீரியப்பிரஜைகள் என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM