நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மண்மேடு சரிந்து விழு அபாயம் இருப்பதன் காரணமாக மலையகத்தில் சில வீதிகள் மாலை 6 மணிக்கு மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதன்படி, பதுளை, பசறை - லுணுகலை ஆகிய வீதிகள் மூடப்படவுள்ளன.
இந்நிலையில் நேற்றிலிருந்து இரத்தினபுரி, பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ் வீதியின் ஊடான 5 ஆம் கட்டையில் இருந்து லுனுகல வரையில் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது.
அத்தோடு வாகன சாரதிகளை மாற்று வழிப்பாதைகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவிப்பு விடுத்துள்ளனர்.
பதுளை 2 ஆம் கட்டை வினித்தகம, வௌஸ்ஸ, 6 ஆம் கட்டை, வினித்தகம வரையிலான வீதியில் அதிகளவான வாகன நெரிசல் காணப்படுகின்றமையால் பொதுமக்கள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த வீதி சீர் செய்யப்பட்டவுடன் வழமைக்கு திரும்புமென பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM