(எம்.எப்.எம்.பஸீர்)
முன்னணி விசாரணைகளை வழி நடத்தி வந்த நிலையில் சி.ஐ.டி. பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர காலி பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக இடமாற்றப்பட்ட நிலையில், அவ்விசாரணை களை கையாண்ட உதவி பொலிஸ் அத்தியட்சரான பீ.எஸ். திசேரா நேற்று முதல் ஊவா மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக இடமாற்றப்பட்டுள்ளார்.

சி.ஐ.டி.யின் மூன்றாம் நிலை உயர் அதிகாரியாக கருதப்பட்ட அவர், சமூக கொள்ளை மற்றும் விஷேட விசாரணைப் பிரிவு ஆகிய முக்கிய இரு பிரிவுகளை வழி நடாத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவி வித்திய படுகொலை விவகாரம், ரத்துபஸ்வலவில் தண்ணீர் கோரி ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு, ஊடகவியலாளர் லசந்த படுகொலை, ஊடகவியலாளர்களான கீத் நொயார், உபாலி தென்னகோன் உள்ளிட்டோர் மீதான தாக்குதல்கள், வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் தொடர்பிலான கருத்தடை விவகாரம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்த விசாரணைகளை உதவி பொலிஸ் அத்தியட்சர் திசேராவே கையாண்டார்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவின் வழி நடத்தலில் இவ்விசாரணைகளை சமூக கொள்ளை விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்த பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா குழு முன்னெடுத்த நிலையில், அந்த விசாரணைகளை நெறிப்படுத்தி அதற்கு தேவையான தலைமைத் துவத்தை உதவி பொலிஸ் அத்தியட்சர் திசேராவே வழங்கியிருந்தார். இந்நிலையிலேயே கடந்த சனிக்கிழமை இடமாற்றப்பட்டார்.
இந்த இடமாற்றமானது பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவினால் தேசிய பொலிஸ் ஆணைக் குழுவின் அனுமதி பெற்றுக்கொள்ளாமல் வழங்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், நேற்று அந்த இடமாற்றம் இரத்து செய்யப்பட்டு, உதவி பொலிஸ் அத்தியட்சர் திசேரா ஊவா மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக தேசிய பொலிஸ் ஆணைக் குழுவால் இடமாற்றம் செய்யப்ப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM