(இராஜதுரை ஹஷான்)
உரிய காரணிகள் ஏதுமின்றி எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வினை ஜனாதிபதி ஒத்திவைத்துள்ளமையானது இடைக்கால அரசாங்கத்தின் மீது பாரிய சந்தேகத்தினை தோற்றுவித்துள்ளது.
மக்களுக்கு சேவையாற்றும் விடயங்களுக்கு பாராளுமன்றத்தினுள் இடைக்கால அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயார் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்,
எதிர்க்கட்சி தலைவர் விவகாரம் குறித்து தொடர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் கிடையாது. எழுந்துள்ள சவால்கள் குறித்து கட்சியின் தலைவரும், சிரேஷ்ட உறுப்பினர்களும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் செயற்பாடுகள் ஒழுங்குபடுத்தல் அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது சபை அமர்வுகளை நிறைவுக்கு கொண்டு வந்து பாராளுமன்ற அமர்வினை அடுத்த மாதம் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்து வர்த்தமானி வெளியிட்டுள்ளமைக்கு எவ்விதமான உரிய காரணிகளும் கிடையாது.
ஜனாதிபதி தேர்தல் நிறைவுப் பெற்றதை தொடர்ந்து ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோத்தபய ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் பாரம்பரிய கோட்பாடுகளுக்கு இணங்க சிம்மாசன பிரசங்ம் உள்ளிட்ட இதர விடயதானங்களை முன்னெடுக்க வேண்டும்.
ஆனால் அவர் மாறுப்பட்ட விதத்தில் செயற்பட்டுள்ளமை பின்வரும் விடயங்களை மையப்படுத்திய சந்தேகத்தினை தோற்றுவித்துள்ளன என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM