சந்திராயன் - 2 விக்ரம் லேண்டரின் பாகங்கள் கண்டு பிடிப்பு : தமிழ் இளைஞனுக்கு நன்றி தெரிவித்த நாசா

Published By: R. Kalaichelvan

03 Dec, 2019 | 01:21 PM
image

இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி ஆய்வு நிலையத்தால் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்ட சந்திராயன் 2- விண்கலத்தின் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

48 நாள் பயணமாக நிலவின் தென்துருவ பகுதியில் லேண்டரை தரை இறக்கும் முயற்சி கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. குறித்த லேண்டர் கருவிக்குள் இருக்கும் ரோவர் மூலம் 15 நாட்கள் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தனர்.

இது குறித்து தெரியவருவதாவது,

இந்தமாத தொடக்கத்தில் சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து லேண்டர் கருவி தனியாக பிரிந்ததுள்ளது.

சந்திராயன் - 2 விண்கலத்துடன் பொருத்தப்பட்ட  லேண்டர் கருவிதான் நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்கு வடிவமைப்பட்டிருந்தது.

லேண்டர் கருவிக்குள் இருக்கும் ரோவர் மூலம் 15 நாட்கள் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தனர். 

நிலவின் தென்துருவ பகுதியில் லேண்டரை தரை இறக்கும் முயற்சி கடந்த செப்டம்பர்  மாதம் 7 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.

விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவ பகுதியில் இதுவரை எந்த நாடும் விண்கலத்தை தரை இறக்கியது இல்லை. எனவே லேண்டர் தரை இறங்கும் நிகழ்வை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்தது.

ஆனால் லேண்டரை தரை இறக்கும்போது நிலவில் இருந்து சில கிலோ மீற்றர் தொலைவில் அதன் வேகம் அதிகரித்தது.

இதன் காரணமாக லேண்டர் கருவி திசைமாறி சென்று நிலவின் மேற்பரப்பில் மோதி விழுந்து விட்டது. 

லேண்டருடன் மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றிபெறவில்லை. இதனால் 14 நாட்களுக்கு பிறகு லேண்டரை உயிர்ப்பிக்கும் முயற்சியை இஸ்ரோ கைவிட்டது.

லேண்டர் திசைமாறி சென்று விழுந்து விட்டதாக கருதப்படும் பகுதியில் உயர்சக்தி கொண்ட கேமராக்கள் மூலம் படம் பிடிக்கப்பட்டது. 

இந்நிலையில் லேண்டர் எந்த பகுதியில் விழுந்துள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என இஸ்ரோ அறிவித்தது.

இதற்கிடையே அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு விஞ்ஞானிகள் லேண்டரை கண்டுபிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.  

இந்நிலையில் நிலவுக்கு அமெரிக்காவின் நாசா அனுப்பிய செயற்கைக்கோள் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துள்ளது.

மேலும் நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டரின் பாகங்கள் விழுந்த இடத்தை புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளது நாசா.

புகைப்படத்தில் உள்ள பச்சை நிறப் புள்ளிகள் லேண்டரின் சிதைவுகளை குறிப்பதாகவும், நீல நிற புள்ளிகள் விக்ரம் லேண்டரின் பாகங்கள் விழுந்ததால் ஏற்பட்ட பள்ளத்தை குறிப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 17, ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி மற்றும் 15 ஆம் திகதி நவம்பர் 11 ஆகிய நாட்களில் வெளியிட்ட புகைப்படங்களை ஆய்வு செய்த தமிழக இளைஞர் சண்முக சுப்பிரமணியன், விக்ரம் லேண்டரின் பாகங்கள் விழுந்த இடத்தை கண்டுபிடித்து நாசாவுக்கு அனுப்பி உள்ளார். 

அவரது ஆய்வை நாசா விஞ்ஞானிகளும் உறுதி செய்து அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

சண்முக சுப்பிரமணியன் கொடுத்த தகவலின் அடிப்படையில்,  நாசா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் விக்ரம் லேண்டரின் பாகங்கள் விழுந்த இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

 அந்த புகைப்படத்தில் உள்ள பச்சை நிறப் புள்ளிகள் லேண்டரின் சிதைவுகளை குறிப்பதாகவும், நீல நிற புள்ளிகள் லேண்டரின் பாகங்கள் விழுந்ததால் ஏற்பட்ட பள்ளத்தை குறிப்பதாகவும் நாசா கூறி உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26