சீனாவிலுள்ள மக்கள் தமது புதிய கையடக்கத் தொலைபேசிகளுக்கான தொடர்பாடல் சேவையைப் பெறுவதற்கான பதிவை மேற்கொள்ளும் போது தமது முகத்தை ஊடுகாட்டும் பரிசோதனைக்கு (ஸ்கானிங்) உட்படுத்துவதற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் நிர்ப்பந்தத்துக்குள்ளாகியுள்ளனர்.
அந்நாட்டிலுள்ள நூற்றுக்கணக்கான இணையத்தள பாவனையாளர்களின் ஆளடையாளத்தை உறுதிசெய்து கொள்ளும் முகமாகவே அதிகாரிகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை குறித்து கடந்த செப்டெம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.
இணையத்தள பாவனை குறித்து பிரஜைகளுக்குள்ள நியாயபூர்வமான உரிமைகளையும் அக்கறைகளையும் பாதுகாக்க விரும்புவதாக சீனா தெரிவிக்கிறது.
கையடக்கத்தொலைபேசி சேவைகளைப் பெற பதிவு செய்பவர்களால் வழங்கப்படும் அடையாள அட்டைகள் அசலானதா என்பதை உறுதிப்படுத்தும் முகமாகவே மேற்படி முகத்தை ஊடுகாட்டும் பரிசோதனைக்கு உட்படுத்தும் செயற்கிரமம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சீனா ஏற்கனவே தனது பிரஜைகளின் முகத்தை அடையாளம் காண்பதற்கான சர்ச்சைக்குரிய தொழில்நுட்பத்தை நடை முறைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM