ஐதராபாத் புறநகர் பகுதியில் பெண் வைத்தியர் ஒருவரை கொலை செய்து எரித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
ஐதராபாத்தைச் சேர்ந்தவர் 26 வயதுடைய வைத்தியர் பிரியங்கா ரெட்டி கொல்லப்பூரில் உள்ள அரசு கால்நடை வைத்தியாசலையில் வைத்தியராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அவர் உடனடியாக ஒரு வைத்தியர் ஒருவரை சந்திக்க தனது ஸ்கூடரில் சென்றுள்ளார்.
இந்நிலையில் அவரது ஸ்கூடர் வாகனம் இடையில் பஞ்சராகியுள்ளதை அடுத்து அருகில் சென்ற கொண்டிருந்து லொறியின் சாரதி ஒருவர் அவரது ஸ்கூடர் வண்டியை பஞ்சர் பார்க்க உதவி செய்ததை அடுத்து , அந்தத் தகவலை தன் குடும்பத்தினருக்கு தொலைபேசியில் தகவலை தெரவித்தார்.
இரவு 9 மணிக்கு தன் சகோதரிக்கு மீண்டும் தொடர்புகொண்ட பிரியங்கா ஸ்கூடர் பழுது பார்க்கப்ட்டது தொண்டுபள்ளி ஓஆர்ஆர் டோல்கேட் அருகில்தான் இப்போது இருக்கிறேன்.
எனக்கு பதற்றமாக இருக்கிறது நீ என்னுடன் பேசிக்கொண்டே இரு எனக் கூறியுள்ளார்.
சிறிது நேரத்தில் அவரது தொலைபேசி துண்டிப்பபை இழந்தது , நீண்டநேரமாகியும் தொலைப்பேசி இயங்கவில்லை.
இதனால் குடும்பத்தினர் அந்த டோல்கேட் பகுதிக்கு விரைந்துள்ளனர்.
ஆனால் அப்போது பிரியங்கா அங்கு இருக்கவில்லை இதனால் பதற்றமடைந்த அவர்கள், ஷாம்ஷாபாத் பொலிஸ் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் ஐதராபாத் - பெங்களூரு தேசிய வீதிக்கு அருகில் ஷாத்நகர் பகுதியில் உள்ள ஒரு பாலத்துக்குக் கீழே இளம்பெண்ணின் சடலம் பாதி எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக பொலிஸாருக்குத் தகவல் வந்தது.
பொலிஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பின்னர் அது பிரியங்கா எனத் தெரியவந்தது.
அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளார்.
டோல்கேட் அருகே உள்ள ஒரு கட்டிடத்தை பொலிஸார் சோதனை செய்தபோது, உள்ளாடைகள் , பணப்பை மற்றும் ஒரு மது போத்தல் கிடந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
எனவே பிரியங்கா கொலை செய்யப்படுவதற்கு முன் அந்த கட்டிடத்தில் வைத்து அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இக் கொலை தொடர்பான வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன்,லொறி சாரதி உட்பட இருவரை விசாரணை நடத்தி வருகின்றனர்.
அத்தோடு பிரியங்க டோல்கேட் அருகே உள்ள சிசிரிவி காட்களில் அவர் சென்றதையும் பொலிஸ் சோதனை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM