வடக்கிற்கான ரயில்சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று வழமைபோல் வடக்கிற்கான ரயில்சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த யாழ்தேவி புகையிரதம் பிற்பகல் மூன்று மணியளவில் கல்கமுவ- அம்பன்பொல பகுதியில் வைத்து தரம்புரண்டு விபத்துக்குள்ளானது.
விபத்தின் போது யாழ்.தேவி புகையிரதத்தின் ஐந்து பெட்டிகள் புகையிரத பாதையிலிருந்து விலகிச் சென்றுள்ளன. இதேவேளை புகையிரதத்தின் இயந்திரப் பகுதி புகையிரத கடவையில் இறுகியிருந்தது.
இந்த விபத்தில் பயணிகள் ஒருவருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கவில்லை. அருந்த போதும் குறித்த பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது. அதேவேளை சம்பவத்தில் புகையிரத தண்டவாளத்திற்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது தடம்புரண்ட புகையிரத பெட்டகள் தண்டவாளத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளதுடன் தண்டவாளம் சீர்செய்யப்பட்டு, வடக்கிற்கான ரயில்சேவை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
இதேவேளை இந்த விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM