மஸ்கெலியா வைத்தியசாலையில் காலை முதல் மாதாந்த சிகிச்சைக்காக காத்திருந்த மக்கள்

Published By: Digital Desk 4

28 Nov, 2019 | 02:21 PM
image

இன்று மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் 400க்கு மேற்பட்டோர் தங்களது மாதாந்த சிகிச்சைக்காக அதிகாலை முதல் வைத்தியசாலையில் வரிசைலிருந்த போதும் வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரியும், வைத்திய அதிகாரி ஆகிய இருவரும் சுகவீன விடுமுறையில் உள்ளதால் நோயாளர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

இந்நிலையில் சாமிமலை வைத்தியாலையின் வைத்திய அதிகாரியும், உதவி சுகாதார வைத்திய அதிகாரியும் தற்காலிகமாக பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து மாவட்ட உயர் அதிகாரியிடம் தொலைபேசியில் கேட்ட போது 3 பேரும் சுகவீன விடுமுறையில் உள்ளதால் தற்காலிகமாக இந்த இரண்டு வைத்தியரையும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், இவ்வைத்திசாலையின் குறைபாடுகளை நீக்க வேண்டுமாயின், 3000 வைத்தியர்கள் உள்வாங்கப்படவுள்ள நியமனங்களிலிருந்து இவ்வைத்தியசாலைக்கு வைத்தியர்களை அரசு வழங்கும் பட்சத்தில் இப்பற்றாக்குறை நிவர்த்தியாகும் என குறிப்பிட்டார்.

இது குறித்து மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கோவிந்தன் செம்பகவள்ளி அமைச்சர் ஆறுமுக தொண்டமானுக்கு தெரிவித்தை தொடர்ந்து  அமைச்சர் நுவரெலியா மாவட்ட சுகாதார அத்தியட்சகர் சேனக்க தலகலவிடம்  மஸ்கெலியா வைத்தியசாலை தொடர்பான குறைபாடுகளை ஜனாதிபதியிடனும் சுகாதார அமைச்சரருடனும் கலந்துரையாடல் நடாத்தி உடன் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38