ஜனநாயகம் இல்லாத ஒரு ஆட்சியை மக்கள் தவிர்க்க வேண்டும். அரசியல் வாதிகளின் பொய்யான வாக்குறுதிகளை மக்கள் நம்புவது மக்களுக்கு தீங்கான ஒன்றாகும் என்று புதிய தேசிய முன்னணி தெரிவித்துள்ளது. இந்த முன்னணியின் தலைவர் ஜே.கண்டம்பி விடுத்திருக்கும் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நிறைவேறாத பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி எதிர்வரும் பொதுத் தேர்தலில் தங்களின் பதவிகளை தக்கவைத்துக் கொள்ள தற்போதைய அரசாங்கம் முயற்சிக்கின்றது. பொதுத் தேர்தலுக்கு மூன்று மாத காலங்கள் இருக்கும் நிலையில் தங்களின் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முனைகின்றனர். தேர்தலின் பின்னரான காலங்களில் அவர்களின் குடும்ப ஆட்சி தலைதூக்க ஆரம்பிக்கும்.
மக்கள் பொய், உண்மைத் தன்மைகளை புரிந்து தீர்க்கமான முடிவுகள் எடுக்க வேண்டும். நாட்டில் காணப்படும் வரிகளை குறைத்து சம்பள உயர்வினை வழங்க இந்த அரசாங்கத்தினால் முடியுமா? திவிநெகும செயற்றிட்டத்தின் மூலம் நாட்டின் விவசாய உற்பத்தி குறைவடைந்து சென்றதைக் கண்டோம். நாட்டில் வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுகின்ற நிலைமைகளின் போது எந்த ஒரு அரசியல் வாதியும் மக்களை சந்திக்க செல்வது குறைவாகும். சுற்றுலா செல்வதைப் போலவே செல்கின்றனர். மாவோ சேதுங் போல மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு எந்த அரசியல் தலைவரும் செயற்படுவதில்லை.
சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதம் எங்கிருந்து உருவானது. 2 கோடி மக்கள் வாழும் இலங்கை நாட்டில் அதிக பெரும்பான்மை உடையவர்கள் சிங்களவர்கள். ஆனால் தமிழர் மற்றும் முஸ்லிம்கள் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பரந்து வாழ்கின்றனர்.
மக்கள் நன்மை, தீமை என்பவற்றை பிரித்தெறிந்து அரசியல்வாதிகளின் பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாறாமல் நடுநிலையாக தங்களின் தீர்மானங்களை எடுக்க வேண்டும். புலனாய்வுப் பிரிவினர் அரசியல் வாதிகளைப் பாதுகாக்க மட்டுமே செயற்படுகின்றனர். மக்களைப் பற்றிய எவ்வித அக்கறையும் அவர்களுக்கு இல்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM