யாழ்தேவி தடம் புரள்வு: மஹோ - கல்கமுவ ரயில் நிலையங்களுக்கிடையில் விசேட பஸ் சேவை

Published By: Digital Desk 3

28 Nov, 2019 | 10:42 AM
image

கல்கமுவ - அம்பன்பொல ரயில்  நிலையங்களுக்கிடையில் யாழ் தேவி ரயில் தடம் புரண்டமையால் நிறுத்தப்பட்ட ரயில் சேவை இன்று காலை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை மஹோ மற்றும் கல்கமுவ ரயில் நிலையங்களில் இருந்து இன்று ரயில் சேவைகள் இடம்பெறுகின்றன.

இதேவேளை, மஹோ மற்றும் கல்கமுவ ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையில் ரயில் பாதை சேதமடைந்துள்ளமையால், குறித்த இரு ரயில் நிலையங்களுக்கு இடையே பயணிகளுக்கு விசேட பஸ் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு, பயணிகள் ரயிலில் ஏறி தங்கள் பயணத்தைத் தொடர முடியும்.

பயணிகள் குறித்த இரு ரயில் நிலையங்களுக்கு இடையில் செல்ல பஸ் டிக்கெட்டை வாங்க வேண்டியதில்லை, ஆனால் நிலையங்களிலிருந்து வழங்கப்படும் ரயில் டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி பஸ் வண்டிகளில் பயணிக்கமுடியும்.

தடம் புரண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள விசேட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சேதமடைந்த ரயில் பாதையை புனரமைக்க மேலும் சில நாட்கள் ஆகலாம் என்று தெரவிக்கப்பட்டுள்ளது.

நேற்று, கல்கமுவ ரயில் நிலையத்திற்கு அருகே காங்கேசன்துறை - யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற யாழ் தேவி  ரயில் தடம் புரண்டதில் பயணிகள் சிலருக்கு காயம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அவசர மின் தடை தொடர்பிலும் மதிப்பாய்வு...

2025-02-10 14:17:12
news-image

இன, மத சகவாழ்வுக்கு பாதிப்பு ஏற்படும்...

2025-02-10 17:47:02
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தொடர்ந்து மீண்டும்...

2025-02-10 17:40:48
news-image

நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தி...

2025-02-10 14:19:45
news-image

பிரச்சினைகளுக்கு அரசாங்கத்துக்கு பதிலாக குரங்குகள் தான்...

2025-02-10 17:42:24
news-image

43 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இழப்பீடு...

2025-02-10 17:39:30
news-image

வலுவான உணவுப் பாதுகாப்புக் கொள்கைக்  கட்டமைப்பிற்கு...

2025-02-10 21:57:49
news-image

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி!

2025-02-10 20:57:38
news-image

நிறுவனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை மேம்படுத்த அரச தனியார்...

2025-02-10 17:47:33
news-image

8 வாரங்களாக நிலைமை குறித்து அறிந்திருந்தும்...

2025-02-10 17:44:05
news-image

தனது இயலாமையை மறைத்துக் கொள்ள உயிரினங்களை...

2025-02-10 17:48:14
news-image

யு.எஸ்.எ.ஐ.டி நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றுக்...

2025-02-10 17:41:18