(தி.சோபிதன்)
வாக்களித்த தமிழ் மக்களுக்கு சஜித் பிரேமதாச நன்றி தெரிவிக்கவில்லை என்பதனைக் கண்டுபிடித்த வடக்கு மாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, புதிய ஜனாதிபதி கோத்தபாயவுக்கு வடக்கில் வாக்களித்த தமிழர்களையும் சிங்கள மக்களாக மாற்றியதை அறியவில்லையா? என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்காக இரு சிங்கள பிரதான வேட்பாளர்கள் உட்பட 35பேர் போட்டியிட்டனர். அதிலே தமிழ் மக்கள் ஓர் நிலைப்பாட்டின் அடிப்படையில் ஒருவருக்கு வாக்களித்தபோதும் ஜனாதிபதியாக தெரிவானவரும் வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் வாக்குகளில் இருந்தும் 75 ஆயிரம் வரையான வாக்குகளைப் பெற்றிருந்தார்
இருந்தபோதும் "சிங்கள மக்களின் வாக்குகளால் தெரிவான ஜனாதிபதியென விழித்ததாக பத்திரிகைகள் கூறுகின்றன. அவ்வாறானால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு போன்ற சிங்கள மக்கள் வாழாத மாவட்டத்தில் புதிய ஜனாதிபதிக்கு வாக்களித்த மக்கள் அனைவரும் சிங்கள மக்களாகவே கருதப்பட்டுள்ளனர்.
இதேபோன்று ஜனாதிபதியாக பதவி ஏற்ற இடமும் துட்டகைமுனு வால் அமைக்கப்பட்ட ஆலயம் எனக் கூறுவதன் மூலம் றுகுணுவில் இருந்து வந்து தமிழ் மன்னனான எல்லாள மன்னனை வீழ்த்தியதனை ஞாபகமூட்டுவதற்காகவே அதே றுகுணுவில் இருந்து வந்து எல்லாள மன்னனை அழித்த துட்டகைமுனுவினால் அமைக்கப்பட்ட ஆலயத்தில் பதவிப் பிரமாணம் இடம்பெற்றதா என்றும் வரலாற்றியலாளர்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.
நிலைமை இவ்வாறிருக்க இவை தொடர்பில் வாய் திறக்க தைரியமற்றவராகவோ அல்லது புதிய ஜனாதிபதி கூறிய வரைவிலக்கணத்துக்குள் அகப்பட்ட தனாலோ என்னவோ தவராஜா இது குறித்து வாய் மூடி மௌனியாக இருக் கின்றார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM