இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வுகாணும் செயற்­பா­ட்டினை ஜனா­தி­பதி தற்­து­ணி­வுடன் மேற்­கொள்ள வேண்டும்- சிவ­சக்தி ஆனந்தன்

27 Nov, 2019 | 03:05 PM
image

அதி­கூ­டிய பெரும்­பான்மை மக்­களின் ஆணையைப் பெற்­றுள்ள புதிய ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவும் பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க் ஷவும் தேசிய இனப்­பி­ரச்­சினைத் தீர்­வுக்­கான நட­வ­டிக்­கை­களை தற்­து­ணி­வுடன் மேற்­கொள்ள வேண்டும் என்று ஈழ­மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­ன­ணியின் செய­லா­ளரும் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சிவ­சக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்­துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,


இலங்கை அர­சியல் வர­லாற்றில் தேசிய இனப்­பி­ரச்­சினை ஏழு­ த­சாப்­தங்கள் கடந்தும் புரை­யோடிப் போயி­ருக்­கின்­றது. விடு­த­லைக்­கான கோரிக்கை அஹிம்சை ரீதி­யாக முன்­வைக்­கப்­பட்­ட­போது அதனை தென்­னி­லங்கை தலை­வர்கள் கருத்­திற்­கொள்­ளா­மையின் கார­ணத்­தினால் ஆயு­தப்­போ­ராட்­ட­மாக உரு­வெ­டுத்து 2009 வரையில் நீடித்­தி­ருந்­தது.


போர் நிறை­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு பத்து ஆண்­டு­க­ளா­கின்­ற­போதும் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான மூல­கா­ர­ணத்­தினை உணர்ந்து தீர்வு காணு­வ­தற்­கான இத­ய­சுத்­தி­யான நட­வ­டிக்­கைகள் இது­வ­ரையில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.


கடந்த காலத்தில் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வி­டத்தில் ஆட்சி அதி­கா­ரங்கள் இருந்த சந்­தர்ப்­பத்தில் பெரும்­பான்மை மக்கள் தமது ஆணையைப் பெரு­வா­ரி­யாக வழங்­கி­யி­ருந்­த­போதும் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு விட­யத்­தினை பூர்த்தி செய்ய முடிந்­தி­ருக்­க­வில்லை. அதே­போன்று தற்­போது ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவுக்கு பெரும்­பான்மை மக்கள் ஆணையை வழங்­கி­யுள்­ளனர். ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவுக்கு வடக்­கு–-­கி­ழக்கு வாழ் தமிழ் மக்கள் வாக்­க­ளிக்­காது விட்­ட­மைக்கு பலத்­த­கா­ர­ணங்கள் உள்­ளன என்­பது பகி­ரங்­க­மான விட­ய­மாகும் தமிழ் மக்­களின் ஜன­நா­யக தீர்ப்­புக்கும் மதிப்­ப­ளிக்­க­வேண்டும்.


ஆகவே தென்­னி­லங்கைப் பெரும்­பான்மை மக்­களை ஏற்­றுக்­கொள்­ளச்­செய்யும் திரா­ணி­யு­டைய தலை­மையைப் பெற்­றி­ருக்­கின்ற புதிய ஜனா­தி­பதி சிங்­கள, பௌத்த சித்­தாந்­தத்­துக்குள் கட்­டுண்டு நிற்­காது தற்­து­ணி­வுடன் இந்த நாட்டின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வினை வழங்கும் செயற்­பா­டு­களை ஆரம்­பிக்க வேண்டும்.


அத்­துடன் போர் நிறை­வுக்கு வந்­த­கை­யோடு 12ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான போரா­ளி­களை புனர்­வாழ்­வுக்கு உட்­ப­டுத்தி விடு­வித்த நிலையில் தற்­போது தண்­ட­னைக்­கா­லத்­தி­னையும் தாண்டி சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வரும் 107வரை­யி­லான தமிழ் அர­சியல் கைதிகள் நிபந்­தனை இன்றி விடு­தலை செய்­யப்­ப­ட­வேண்டும்.


அதே­போன்று காணாமல் ஆக்­கப்­பட்டோரின் உற­வி­னர்­கள் ஆயிரம் நாட்கள் கடந்தும் தொடர்ச்­சி­யாக போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இந்த நிலைமை தொடர்ந்தும் நீடிக்க முடி­யாது. அவர்­களின் அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­ப­தை­யா­வது வெளிப்­ப­டைத்­தன்­மை­யுடன் பொறுப்­புக்­கூ­ற­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. இதில் தொடர்ந்தும் தாம­தங்­களை செய்­வது மனி­தா­பி­மா­ன­மற்ற நட­வ­டிக்­கை­யா­கவே அமையும்.  


குறிப்­பாக, போருக்கு பின்னர் நடை­பெற்ற மூன்று ஜனா­தி­பதி தேர்­தல்­க­ளிலும் அதேபோல் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ஆரம்­பிக்­கப்­பட்ட பின் நான்கு பாரா­ளு­மன்றத் தேர்­தல்­க­ளிலும் வடக்­கு-­–கி­ழக்கு வாழ் தமிழ் மக்கள் தெளி­வான செய்­தியை அர­சாங்­கத்­துக்கும் தமிழ்த் தலை­மை­க­ளுக்கும் வழங்­கி­யி­ருந்­தார்கள்.
இருப்­பினும் தமிழ் தலை­வர்கள் எமக்கு கிடைத்த சந்­தர்ப்­பங்­களை இரா­ஜ­தந்­தி­ர­ரீ­தி­யாக பயன்­ப­டுத்­து­வ­தற்கு பதி­லாக அவற்றை சுய­லாப கட்சி அர­சி­ய­லுக்­காகவும் சலு­கை­க­ளுக்­கா­க­வுமே பயன்­ப­டுத்­தி­யுள்­ளனர். இதன் காரணமாக தமிழ் மக்கள் அடுத்தகட்டம் என்ன செய்வதென்றறியாது தடுமாறும் ஒரு சூழலுக்குள் தள்ளி விடப்பட்டிருக்கின்றார்கள்.


ஆகவே தமிழ் மக்களின் ஆணையைப் பெற்று அவர்களை நிர்க்கதியாக்கிய தமிழ்த் தலைமைகளுக்குரிய பாடத்தினை தமிழ் மக்கள் அடுத்து வரும் காலத்தில் வழங்கு வார்கள் என்று எதிர்பார்ப்பதோடு தமிழ் மக்களின் நிலைப்பாடுகளை உண்மையாக பிரதிபலிக்கும் மாற்றுத்தலைமையும் விரை வில் உருவெடுக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசபந்து தென்னக்கோனுக்கு 3 வேளையும் வீட்டிலிருந்து...

2025-03-25 11:29:23
news-image

யாழில் சிறுமியை மின் கம்பத்தில் கட்டி...

2025-03-25 11:23:33
news-image

யோஷித ராஜபக்ஷவும் அவரது மனைவியும் பொலிஸ்...

2025-03-25 11:14:33
news-image

யாழில் ஏ.ரி.எம். அட்டையைத் திருடி மதுபானம்...

2025-03-25 11:12:02
news-image

வேட்புமனு தாக்கலின் பின் தேர்தல் விதிமுறை...

2025-03-25 11:05:49
news-image

பிரிவினைவாத புலம்பெயர்ந்தோர் முன்னர் எப்போதும் இல்லாத...

2025-03-25 11:06:05
news-image

மீட்டியாகொடையில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

2025-03-25 10:48:17
news-image

நாட்டில் சில பகுதிகளில் எட்டரை மணிநேரம்...

2025-03-25 10:42:16
news-image

'மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேசநீதிமன்றத்திற்கு...

2025-03-25 10:47:57
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்நீதிமன்றில்...

2025-03-25 10:23:00
news-image

சம்மாந்துறையில் மனித பாவனைக்குதவாத குளிர்பானம் கைப்பற்றல்...

2025-03-25 11:18:01
news-image

நாட்டின் பல பகுதிகளில் மிதமான நிலையில்...

2025-03-25 10:03:41