மாண­வர்­க­ளு­டைய சீரு­டைக்­கான காசோலை வழங்­கலில் சிக்கல் நிலை

27 Nov, 2019 | 02:52 PM
image

(ஆர்.விதுஷா)

கடந்த  அர­சாங்­கத்­தினால்  முறை­யான வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டா­மையின்  கார­ண­மாக  பாட­சாலை  மாண­வர்­க­ளுக்­கான  சீரு­டைக்­கான  காசோ­லை­களை  வழங்­கு­வதில் சிக்கல்  நிலைமை  ஏற்­பட்­டுள்­ள­தாக  தெரி­வித்த  இலங்கை  ஆசி­ரியர்  சங்­கத்தின்  பொதுச் செய­லாளர்   ஜோசப்  ஸ்டாலின்    ஆசி­ரி­யர்­க­ளுக்­கான  சம்­ப­ளப்­பி­ரச்­சி­னைக்­கான  தீர்வும் இது வரையில்  காணப்­ப­ட­வில்லை  எனவும்   குறிப்­பிட்டார்.  

பாட­சாலை மாண­வர்­க­ளுக்­கான  சீரு­டைக்­கான காசோலை வழங்­கு­வதில்   சிக்கல்  நிலைமை  தோன்­றி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றமை குறித்து அவ­ரிடம்  வின­வி­ய­போதே  இவ்­வாறு  தெரி­வித்தார்.

அவர்  மேலும்  கூறி­ய­தா­வது,  

பாட­சாலை  மாண­வர்­க­ளுக்­கான  சீரு­டைக்­கான காசோ­லை­யையே கடந்த  அர­சாங்கம் வழங்கி வந்­தது. இந்­நி­லையில்  , சாதா­ர­ண­மாக  சீரு­டைக்­கான  காசோலை  வழங்கும்  பணிகள்   மூன்றாம்  தவணை இறு­தியில்   இடம்பெறும். ஆயினும்  ஆட்சி  மாற்­றத்தின் கார­ண­மாக  பாட­சாலை  மாண­வர்­க­ளுக்­கான சீரு­டைக்­கான காசோலை  வழங்­கு­வதில்  சிக்கல்  நிலைமை  ஏற்­பட்­டுள்­ளது.  

கடந்த அர­சாங்­கத்தின் முறை­யான  வேலைத்­திட்டம் இன்­மையே இந்த  சிக்கல்  நிலை­மைக்கு கார­ண­மாகும். எதிர்­வரும்  29  ஆம் திகதி  பாட­சாலை  விடு­முறை  வழங்­கப்­ப­ட­வுள்­ளது.  ஆயினும்,  மாண­வர்­க­ளுக்­கான  காசோ­லை­களை  வழங்­கு­வ­தற்­கான  எத்­த­கைய ஏற்­பாடும் மேற்­கொள்­ளப்­பட­வில்லை.  பாட­சாலை மாண­வர்­க­ளுக்­கான  புதிய  புத்­த­கங்­க­ளுக்கும்  பற்­றாக்­குறை நில­வு­கின்­றது. மாண­வர்­க­ளு­டைய அடுத்த வருட  கல்வி  நட­வ­டிக்­கை­க­ளுக்கு இந்த விட­யங்கள் சிக்கல் நிலை­மையை  தோற்­று­விக்கும் .  

இவ்­வி­டயம்  தொடர்பில்  புதிய  கல்வி  அமைச்­ச­ருடன்  கலந்­து­ரை­யா­டலை  மேற்­கொள்ள  உத்­தே­சித்­தி­ருக்­கின்றோம்.  அவர்  நாளை  (இன்று) இடம்பெற­வுள்ள  அமைச்­ச­ரவைக் கூட்­டத்தின்போது  இது தொடர்பில்  கவ­னம்­செ­லுத்தி  அமைச்­ச­ரவை பத்­தி­ர­மொன்றை  சமர்ப்­பிப்­ப­தற்­கான  நட­வ­டிக்­கைகளை  மேற்­கொள்­வ­தாக  கூறி­யுள்ளார்.

இதே­வேளை,  ஆசி­ரி­யர்­க­ளு­டைய  சம்­ப­ளப்­பி­ரச்­சினை  தொடர்­பான  விட­யத்­திலும்  இழுபறி நிலைமையே  காணப்படுகின்றது. அந்த  பிரச்சினைக்கான  தீர்வினை  காணும் வகையில் கடந்த அரசாங்கத்தினால்  ஏற்படுத்தப்பட்ட சம்பள முரண்பாடு  தொடர்பில்  ஆராய்வதற்கான  ஆணைக்குழு  இது வரையில்  எந்த தீர்வினையும்  எமக்கு  பெற்றுத்தரவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வயல் பிரதேசத்தில்...

2025-01-21 18:16:48
news-image

இலங்கை - இத்தாலிக்கிடையில் இருதரப்பு விமான...

2025-01-21 17:33:12
news-image

2024 ஆம் ஆண்டில் 386 யானைகள்...

2025-01-21 17:12:31
news-image

மேற்கு கொள்கலன் முனையம் இரண்டுக்கான ஆலோசனை...

2025-01-21 17:31:50
news-image

அர்ச்சுனா எம்பியை கைது செய்ய நீதிமன்றம்...

2025-01-21 16:49:55
news-image

அம்பியூலன்ஸ் வண்டி - டிப்பர் வாகனம்...

2025-01-21 16:31:59
news-image

ஹிக்கடுவையில் போதைப்பொருள், தோட்டாக்களுடன் நடனக் கலைஞர்...

2025-01-21 16:05:58
news-image

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் 06...

2025-01-21 15:53:35
news-image

03 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன்...

2025-01-21 15:45:04
news-image

அரசாங்கத்தின் முக்கிய திட்டங்களுக்கு உலக வங்கியிடமிருந்து...

2025-01-21 15:46:28
news-image

புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தும் வரை பயங்கரவாத...

2025-01-21 15:22:45
news-image

காணாமல் போன இளைஞனை கண்டுபிடிக்க பொதுமக்களிடம்...

2025-01-21 15:30:13