மட்டக்களப்பு கல்முனை வீதியிலுள்ள கல்லடி பிரதேசத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இரு பொலிசார் உட்பட 3 படுகாயமடைந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (26) பகல் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
கல்லடி வேலூர் 4 ம் குறுக்கு காளிகோவில் வீதியைச் சேர்ந்த மீன் வியாபாரியான 61 வயதுடைய சவுந்தரராஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பதில் பொலிஸ் அதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகிய இருவரும் சம்பவதினமான நேற்று பகல் 1 மணியளவில் கடமை நிமித்தமாக காத்தான்குடி பகுதியில் இருந்து மட்டக்களப்பை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது
கல்லடி இலங்கை வங்கிக்கு அருகாமையில் புதிதாக அமைக்கப்பட்ட வீதி வளைவு பகுதியில் இடதுபக்கத்தில் இருந்து திடீரென வலதுபக்கம் வீதி வளைவு பகுதிக்கு சம்பவத்தில் உயிரிழந்தவர் அவரது மகனுடன் மோட்டர் சைக்கிளை திருப்பும்போது எதிரே வந்த பொலிசாரின் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்
இதில் படுகாயமடைந்த சிறுவன் மற்றும் பொலிசார் உட்பட 3 பேரை வைத்தியயசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை இடம்பெற்று வருகின்றதுடன் உயிரிழந்தவரின் சடலம் மட்டு போதனா வைத்தியசாலை பிரேதஅறையில் வைக்கப்பட்டுள்ளது
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM