இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் ஒருவர் பலி - இரு பொலிசார் உட்பட மூவர் படுகாயம் 

Published By: Digital Desk 4

27 Nov, 2019 | 10:35 AM
image

மட்டக்களப்பு கல்முனை வீதியிலுள்ள கல்லடி பிரதேசத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள்  ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இரு பொலிசார் உட்பட 3 படுகாயமடைந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (26) பகல் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

கல்லடி வேலூர் 4 ம் குறுக்கு காளிகோவில் வீதியைச் சேர்ந்த மீன் வியாபாரியான 61 வயதுடைய சவுந்தரராஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பதில் பொலிஸ் அதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகிய இருவரும் சம்பவதினமான நேற்று பகல் 1 மணியளவில் கடமை நிமித்தமாக காத்தான்குடி பகுதியில் இருந்து  மட்டக்களப்பை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது  

கல்லடி  இலங்கை வங்கிக்கு அருகாமையில்  புதிதாக அமைக்கப்பட்ட வீதி வளைவு பகுதியில் இடதுபக்கத்தில் இருந்து திடீரென வலதுபக்கம் வீதி வளைவு பகுதிக்கு சம்பவத்தில் உயிரிழந்தவர் அவரது மகனுடன் மோட்டர் சைக்கிளை திருப்பும்போது எதிரே வந்த பொலிசாரின் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்  

இதில் படுகாயமடைந்த சிறுவன் மற்றும் பொலிசார் உட்பட 3 பேரை வைத்தியயசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை இடம்பெற்று வருகின்றதுடன் உயிரிழந்தவரின் சடலம் மட்டு போதனா வைத்தியசாலை பிரேதஅறையில் வைக்கப்பட்டுள்ளது  

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41