மாவீரர் துயிலும் இல்லத்தில் தற்காலிக நினைவு தூபி , நினைவு கற்கள் அனைத்தும் இராணுவத்தினால் அகற்றல்

Published By: Daya

26 Nov, 2019 | 03:28 PM
image

வடக்கு- கிழக்குப் பகுதிகள் முழுவதும் மாவீரர் தினத்திற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருகின்ற நிலையில் நேற்று திங்கட்கிழமை இரவு பண்டிவிருச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தினத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தற்காலிக நினைவு தூபி மற்றும் நினைவு கற்கள் அனைத்தும் இராணுவத்தினரால் அகற்றப்பட்டு அப்புறப்படுத்தப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடையம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

நாளை புதன் கிழமை (27) தமிழர் தாயக பகுதிகளில் மாவீரர் தினத்திற்கு என மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டு பொது சுடர் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில்,  மன்னார் மடு பண்டிவிருச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நினைவு தூபி மற்றும் கற்கள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை  இரவு இராணுவத்தினரால் அகற்றப்பட்டுள்ளதாகவும் குறித்த நேரத்தில் மாவீரர் துயிலும் இல்ல பகுதிகளில் அதிகளவிலான இராணுவ வீரர்கள் மற்றும்   இராணுவ வாகனங்களும் காணப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் குறித்த துயிலும் இல்லம் சிரமதான பணிகளின் போது பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் புலனாய்வாளர்கள் பலர் வருகை தந்து பொது மக்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் விதமாகவும் செயற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில்  நினைவு கூறுமாறு தெரிவித்த நிலையிலும் நாளைய தினம் புதன் கிழமை மாவீரர் நினைவு தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் இராணுவத்தினரின் இத்தகைய செயற்பாடுகள் மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31