அ­தா­வுல்­லாவின் முகத்­தி­ரையை கிழித்­தெ­றிந்து பாடம் புகட்­ட­ வேண்டும் - திகாம்பரம்

Published By: Digital Desk 4

26 Nov, 2019 | 11:19 AM
image

முன்னாள் அமைச்சர் அத்­தா­வுல்லா  எமது மக்­களை இழி­வு­ப­டுத்திக் கூறி­யுள்ளார். இத்­த­கை­ய­வர்­களின் முகத்­தி­ரையைக் கிழித்து மலை­யக மக்கள் என்றால் யார் என்­பதை நிரூ­பித்துக் காட்ட வேண்டும் என்று தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பி.திகாம்­பரம் தெரி­வித்­துள்ளார்.

 மலை­யக மக்­களை இழி­வு­ப­டுத்திப் பேசு­வோரின் எண்­ணிக்கை நாளுக்கு நாள் அதி­க­ரித்துக் கொண்டே வரு­கின்­றது. எமது மக்­களை படிப்­ப­றிவு இல்­லா­த­வர்கள் என்று கடந்த வாரம் தனியார் தொலைக்­காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்­கு­பற்­றிய முன்னாள் மாகாண அமைச்சர் ஒருவர் கூறி­யி­ருந்தார்.

நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற அதே தொலைக்­காட்சி விவா­தத்தில் கலந்­து­கொண்ட முன்னாள் அமைச்சர் அத்­தா­வுல்லா  எமது மக்­களை இழி­வு­ப­டுத்திக் கூறி­யுள்ளார். இத்­த­கை­ய­வர்­களின் முகத்­தி­ரையைக் கிழித்து மலை­யக மக்கள் என்றால் யார் என்­பதை நிரூ­பித்துக் காட்ட வேண்டும் என்று தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பி.திகாம்­பரம் தெரி­வித்­துள்ளார்.

    அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

இந்­நாட்டின் வள­மான பொரு­ளா­தா­ரத்­துக்கு தமது கடின உழைப்பை நல்கி எந்த வித­மான சுபீட்­சமும் இன்றி வாழ்ந்து வந்த மலை­யக மக்கள் சுய­மாக சிந்­திக்கத் தொடங்கி விட்­டார்கள். எதிர்­நீச்சல் போட்டு தமது வாழ்க்­கையை நடத்தி வரு­கின்­றார்கள். அதன் காரா­ண­மாக அவர்­களின் பிள்­ளைகள் கல்­லூ­ரி­க­ளிலும், பல்­கலைக்கழ­கங்­க­ளிலும் கற்று சமூ­கத்­துக்கு அந்­தஸ்தைத் தேடிக்­கொ­டுத்து வரு­கின்­றார்கள். நாமும் எமது மக்கள் தனி வீடு­களில் கௌர­வ­மாக வாழ வேண்டும் என்று அர­சியல் ரீதியில் காணி உரி­மையை பெற்றுக் கொடுத்து வந்­துள்ளோம்.

இவ்­வாறு தலை நிமிர்ந்­துள்ள, எமது சமூ­கத்தில் பிறந்து வளர்ந்த மலை­யக இளை­ஞர்கள் தமது திற­மை­களின் ஊடாக நாட்­டுக்கு பெருமை தேடிக் கொடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அண்­மையில் துபாய் நாட்டில் இடம்­பெற்ற ஆண­ழகன் போட்­டியில் கலந்து கொண்ட மலை­யக இளைஞன் மாதவன் ராஜ­கு­மாரன் இரண்­டா­வது இடத்தைப் பெற்று நாட்­டுக்கு பெருமை சேர்த்­துள்ளார். கல்வி கற்ற எத்­த­னையோ பேர் உயர் பத­வி­களை அலங்­க­ரித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இந்­நாட்டிலுள்ள ஏனைய சமூ­கத்­த­வர்­க­ளுக்கு தாம் சளைத்­தவர்கள் அல்லர் என்­பதை எடுத்துக் காட்டி வரு­கின்­றார்கள்.

எமது மக்கள் தோட்டம் என்ற அடை­யா­ளத்­தி­லி­ருந்து விடு­பட்டு மலை­யக மக்கள் என்ற பெரு­மை­யோடு வாழ வேண்டும் என்று நாம் பாடு­பட்டு வரு­கின்றோம். பெரும்­பான்மைச் சமூகம் எமக்­கு­ரிய அந்­தஸ்தை வழங்கத் தயா­ராக இருக்­கின்ற நேரத்தில் சிறு­பான்மை சமூ­கத்­த­வர்­களே கேவ­ல­மான வார்த்தைப் பிர­யோ­கத்தை மேற்­கொள்­வதை நாம் சகித்துக் கொண்டும் பார்த்துக் கொண்டும் இருக்க முடி­யாது.

தொலைக்­காட்சி விவா­தத்தில் பங்­கேற்ற தமிழ் முற்­போக்கு கூட்­டணித் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன் அ­தா­வுல்­லா­வுக்கு உட­ன­டி­யாக பதி­லடி கொடுத்து எமது சமூகம் மான­முள்ள சமூகம் என்­பதை பறைசாற்­றி­யுள்ளார். அவரின் துணிச்­ச­லுக்கும், சமூக உணர்­வுக்கும் அனை­வ­ரது பாராட்டும் கிடைத்து வரு­கின்­றது. அத்­தோடு நாம் நின்று விடக்­ கூ­டாது. முன்னாள் அமைச்சர் அ­தா­வுல்­லாவின் அறி­யா­மைக்கும் அகம்­பா­வத்­துக்கும் தகுந்த பாடத்தைக் கற்­பிக்க வேண்டும். அதற்­கான கண்­டனக் கூட்­டங்­களை நடத்தி எமது மக்­க­ளிடம் மன்­னிப்புக் கேட்க வைக்க வேண்டும்.

மலை­ய­கத்தைச் சேர்ந்த முன்னாள் மாகாண அமைச்சர் ஒருவர் தோட்­டங்­களில் படித்­த­வர்கள் அதி­க­மாக இல்லை என்று கூறி இழி­வு­ப­டுத்­தி­யுள்ளார். இன்­னு­மொ­ருவர் வாடா, போடா  என்று வாய்க்கு வந்­த­படி பேசி உழைக்கும் மக்­களை சீண்டிப் பார்த்­துள்ளார். அவர்­களின் முகத் திரை­களைக் கிழித்து அவர்கள் எத்­த­கை­ய­வர்கள் என்­பதை அம்­ப­லப்­ப­டுத்த வேண்டும்.

எந்­த­வொரு சமூ­கத்­தையும் ஏள­ன­மாக நோக்­கினால் தகுந்த தண்­டனை கிடைக்கும் என்பதற்கு மலையக சமூகம் எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும். இன்று நாம் காட்டுகின்ற எதிர்ப்பும், கண்டனமும் எமது எதிர்காலச் சந்ததியினர் மானத்துடன் வாழ வழிவகுக்கும் என்பதை உணர்ந்து கருத்து பேதங்களை மறந்து சமூக ரீதியில் ஒன்றுபடுமாறு அழைப்பு விடுக் கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்து சமுத்திர மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர்...

2025-02-14 16:59:55
news-image

இன்றைய வானிலை

2025-02-15 06:03:24
news-image

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம்...

2025-02-15 02:04:47
news-image

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள்: கமநல...

2025-02-15 02:00:56
news-image

வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை...

2025-02-15 01:57:24
news-image

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச்...

2025-02-15 01:50:41
news-image

தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான வழக்கு:...

2025-02-15 01:44:21
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00