ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திடமும் அதாவுல்லா மன்னிப்பு கோர வேண்டும் - சிறிரெலோ 

Published By: Digital Desk 4

25 Nov, 2019 | 12:25 PM
image

முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவுக்கு ஒன்றை மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறோம் எம் இனத்தை சீண்டி பார்க்க நினைத்தால் அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும்  என்று சிறிடெலோ கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வின்போது மலையக மக்கள் தொடர்பாக சர்ச்சையான முறையில் பேசியிருந்தார்.குறித்த செயற்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்து சிறி டெலோ கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திடமும் அதாவுல்லா மன்னிப்பு கோர வேண்டும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் சமூகம் ஒன்றிணைந்தே வாழ்கிறார்கள் இங்கு வடக்கு தமிழன், கிழக்கு தமிழன், மலையக தமிழன், கொழும்பு தமிழன், வன்னி தமிழன் என்று பிரிவினைகளை உருவாக்கி தமது சுய அரசியல் இலாபங்களை அடைய முயற்சிக்கும் கீழ்த்தர அரசியல்வாதிகளே உங்களுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுக்கிறோம்.

உங்கள் வக்கிரக அரசியலுக்காக ஒற்றுமையாக வாழும் தமிழ் சமூகத்தை பிளவு படுத்த நினைக்காதீர்கள்

உலக வரலாற்றில் தமிழரின் வீரமும் தமிழ் இனத்தின் வரலாற்றையும் கற்றுக்கொள்ளுங்கள் 

ஈழ விடுதலைக்காக தம் உயிரை துச்சமென நினைத்து ஆயுதம் ஏந்தி போராடி தம் உயிர்களை நீத்த பல போராளிகள் நாம் தமிழினம் என்ற ஒன்றை மாத்திரமே மனதில் கொண்டு உயிரை நீத்தார்களே தவிர யாரும் வேற்றுமை பார்த்து போராட்டத்திற்கு வரவில்லை என்பதை மனதில் கொள்ளுங்கள்.

பொறுப்பு வாய்ந்த ஒரு முன்னால் அமைச்சர் பொதுநிலையில் இவ்வாறான கருத்தை முன்வைத்திருப்பது என்பது அவரது முட்டாள் தனத்தையும் அவரது உள்ளத்தில் தமிழர்கள் பற்றிய மனநிலையையும் தெட்டத்தெளிவாக காட்டுகிறது. எனவே தமிழ் மக்களை இவ்வாறு கீழ்த்தரமாக நினைத்திருக்கும் அதாவுல்லா மற்றும் அவர் போன்ற மனநிலையில் உள்ள அனைவரும் இத்துடன் உங்கள் மனதில் இருந்து வக்கிரக எண்ணங்களை மறந்து விடுங்கள் என கேட்டுக்கொள்கிறோம். 

இதேவேளை குறித்த நிகழ்ச்சியில் பயங்கரவாதிகளை அழித்தோம் என்றும் அதாவுல்லா கருத்து தெரிவித்திருந்தார் அதாவுல்லாவுக்கு ஒன்றை மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறோம் இலங்கையில் இடம்பெற்றது உரிமைக்கான விடுதலைப்போராட்டமே தவிர பயங்கரவாதமோ தீவிரவாதமோ இல்லை அது பயங்கரவாதம் என்றால் ஈஸ்டர் தினத்தன்று மத ஸ்தலங்களில் குண்டு வெடித்து பல உயிர்களை பலியெடுத்தது என்பது புனித போரா? என்ற கேள்வியையும் எழுப்புகிறோம்

எனவே தொடர்ந்தும் எம் இனத்தை சீண்டி பார்க்க நினைத்தால் அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என சிறி தமிழீழ விடுதலை இயக்கம் (சிறிரெலோ) எச்சரிக்கை  விடுவதாக அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 20:53:02
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10