கொலம்பியாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 3 பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.
கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சாண்டாண்டர் நகரில் நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸ் நிலையம் அருகே வாகனத்தில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் பொலிஸார் 3 பேர் உயிரிழந்துள்ளதோடு,10 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இந்தக் குண்டு வெடிப்பு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இக்குண்டுவெடிப்பு ஏற்பட்ட பகுதி கொலம்பியாவில் கடத்தல் தொழில்கள் நடைபெறும் முக்கிய பகுதி என்று கொலம்பியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலம்பியாவில் அரசுக்கு எதிராக கடந்த சில நாட்களாக தீவிரமான போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தக் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் ஊழல் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு எதிரான கைது நடவடிக்கையை எதிர்த்து இளைஞர்களும், பொது மக்களும் கொலம்பியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
வியாழக்கிழமை சுமார் 2 லட்சத்துக்கு அதிகமானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளிக்கிழமையும் கொலம்பியாவின் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. அரசுக்கு எதிரான போராட்டங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM