இங்கிலாந்தின் பிரபல உணவகம் டீ, கேக் முதலிய உணவுப்பொருட்களை சுவை பார்த்து சொல்வதற்காக தினமும் 129 அமெரிக்க டொலர் சம்பளத்திற்கு ஊழியர்களை நியமிக்க உள்ளது.
இங்கிலாந்தின் கிராஸ்மியர் நகரில் டபோடில் உணவகம் மற்றும் அழகுநிலையம் செயற்பட்டு வருகிறது. இந்த உணவகம் தனது வாடிக்கையாளர்களுக்கு சுவை மிகுந்த உணவு வழங்குவதை, உறுதி செய்வதற்காக வித்தியாசமான முயற்சியில் இறங்கி உள்ளது.
அதாவது, உணவகத்தில் தயாரிக்கப்படும் டீ மற்றும் நொறுக்குத் தீனிகளை (ஸ்னாக்ஸ்) சுவை பார்த்து சொல்வதற்காக பிரத்யேக ஊழியர்களை நியமிக்க உள்ளது. குறித்த ஊழியர்களுக்கு தினமும் 129 அமெரிக்க டொலர்கள் சம்பளம் வழங்க உள்ளது.
இது குறித்து அந்நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கையில்,
‘ஆடம்பரமான பிற்பகல் வேளை தேநீரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறோம். பிரிட்டனிலேயே இது தான் சிறந்த உணவகம் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த உணவுப்பொருளின் சுவை சோதனையாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
இந்த வேலைக்காக உணவகத்தின் இணையதளத்தில் பலரும் விண்ணப்பித்துள்ளனர். தேர்ந்தெடுக்கப்படும் சுவை-சோதனையாளர்கள் தேநீர் மற்றும் பீட்ரூட் மற்றும் சீஸ் ஸ்கோன்கள், மாலை நேரம் உட்கொள்ளும் பிஸ்கட்டுகள் மற்றும் மிளகுக்கீரை பை (ரொட்டி) உள்ளிட்ட சிற்றுண்டிகளை சுவைத்து சோதனை செய்வார்கள்.
இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எதிர்வரும் 25ஆம் திகதி அறிவிக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஒருநாள் சம்பளமாக 129 அமெரிக்க டொலர்களும் கட்டணம் ஏதுமின்றி இரவு இங்கேயே தங்கிக்கொள்ள அனுமதியும் வழங்கப்படும்’ என தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM