19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை

Published By: Digital Desk 3

22 Nov, 2019 | 02:07 PM
image

பகிடிவதையில் ஈடுபட்டமை தொடர்பான குற்றச்சாட்டுடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ருஹுணு பல்கலைக்கழகத்தின் 19 மாணவர்களுக்கு இன்று  மாத்தறை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

குறித்த சந்தேக  நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் மாத்தறை நீதவான் நீதிமன்ற நீதவான்  முன்னிலைப்படுத்தப்பட்டு  தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் இன்று (22.11.2019)  ரூபா 2500  பெறுமதியான காசு பிணை மற்றும் தலா ஐந்து  இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இதேநேரம், பிணை வழங்குவோரில் ஒவ்வொரு மாணவரின் பெற்றோரும் அல்லது நெருங்கிய உறவினர்களும் இருக்க வேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ருஹுணு பல்கலைக்கழகத்தின் விடுதிக்குள் நுழைவதைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், மாணவர்களுக்கும் பயணத் தடை விதிக்கப்பட்டது.

தண்டனைச் சட்டம் மற்றும் பகிடிவதை சட்டத்தை மீறியதாக சந்தேக நபர்கள் மீது நான்கு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24