ரணில் மீது குற்றஞ்சுமத்த முடியாது - ஹிருணிகா பிரேமசந்திர

Published By: Vishnu

21 Nov, 2019 | 04:48 PM
image

(நா.தனுஜா)

ரணில் விக்கிரமசிங்க மீது நான் குற்றஞ்சுமத்த மாட்டேன். ஏனெனில் அவர் சிறந்ததை செய்யவேண்டும் என்று கருதினாலும், அவருடன் இருப்பவர்கள் அதற்கு வாய்ப்பளிக்காமல் சுயநல நோக்கில் செயற்படுகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் ஹருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

அத்துடன் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கும் தீர்மானத்தை ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட போதும், அவருடன் இருந்த சிலர் அதனை விரும்பவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு வொக்ஷோல் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் காரியாலயத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

எமது கடந்த நான்கு வருடகால ஆட்சியை இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் புறக்கணித்திருக்கின்றார்கள். எனவே எவ்வித சச்சரவுகளுமின்றி அதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். தற்போதைய ஜனாதிபதிக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் அதேவேளை, புதிய ஆளுந்தரப்பின் ஆட்சி எவ்வாறு அமைகின்றது என்பது குறித்து நாம் அவதானத்துடன் இருப்போம். 

2020, 2021 ஆம் ஆண்டுகளில் எமது நாடு பெருமளவான கடன்தொகையை மீளச்செலுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றது. அதனையும் எதிர்கொண்டு, பொருளாதாரத்தையும் ஏனைய துறைகளையும் எவ்வாறு ஸ்திரப்படுத்தப் போகின்றார்கள் என்பது தொடர்பில் கண்காணிப்புடன் செயற்படுவோம் என்றும் அவர் கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08