(செ.தேன்மொழி)
நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஊழல் மோசடிகள் இன்றி நாட்டை முன்னேற்றுவார் என்றும் கூறியுள்ளார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
நாட்டில் இதுவரையிலும் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிகளை விட இவர் மிகவும் மாறுபட்ட பண்புகளை கொண்டவராக காணப்படுகின்றார். வழமையாக புதிய ஜனாதிபதிக்கான வரவேற்பு நிகழ்வுகள் இடம்பெறும் போது மூடப்படும் காலிமுகத்திடல் இந்தத் தடவை மூடப்படவில்லை. நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் போக்குவரத்தும் வழமையைப் போன்று காணப்பட்டது.
சிறந்த தலைமைத்துவ பண்புகளைக் கொண்டுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஊழல் மோசடிகளின்றி நாட்டை சிறப்பாக ஆட்சி செய்வார்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததை அடுத்து அதற்கு முன்னைய அரசாங்கத்தின் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்குகளையும் தொடுத்திருந்தது. ஆனால் அந்த குற்றச்சாட்டுகள் ஏதாவது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளதா? இல்லை தானே.
இந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட மோசடிகள் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை வழங்குவதுடன், நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்த சிலருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தி அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பிலும் இதனுடன் சம்பந்தப்பட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று வாழ்பவர்கள் தொடர்பிலும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நல்லாட்சி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஊழல் தடுப்பு பிரிவு தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது.எப்போதும் போன்று இலங்கையை கறுப்பு கண்ணாடி அணிந்து பார்க்காமல், இலங்கை தொடர்பான நம்பகத்தன்மையை மதிக்கும் வகையிலான செய்திகளை மாத்திரம் வெளியிடுமாறும் பீ.பீ.சி க்கு தெரிவிக்கின்றோம்.
இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிடுகையில்,
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மக்கள் விடுதலை முன்னணி செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு மக்கள் அவர்களின் முடிவுகளை வழங்கியுள்ளனர்.
அனைத்து தமிழ், முஸ்லிம் மக்களையும் இணைத்துக் கொண்டு சிங்களவர்கள் அனைவரும் ஒருமித்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
எதிர்த்தரப்பினர் சட்டத்தை மீறி சுவரொட்டிகளை ஒட்டும் போது எமது ஆதரவாளர்களும் அதனை செயற்படுத்த முயற்சித்தனர். ஆனால் எமது வேட்பாளர் நாம் அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க கூடாது என்று ஒவ்வொருவரையும் அறிவுறுத்தினார்.
நாங்கள் முன்மாதிரியாக எமது பிரசாரங்களை மேற்கொண்டிருந்தோம். எனது குரலைப்போன்று குரலை பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டனர். தற்போது தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் மக்களால் எதிர்த்தரப்பினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை அவர்களால் உணரக் கூடியதாக இருக்கும்.
ஏகாதிபத்தியவாதிகளுக்கு சஜித் பிரேமதாச போன்ற ஒரு தலைவர் தேவைப்பட்டார். அவரிடம் தமது ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவதே அவர்களின் திட்டமாக இருந்தது.
இந்த நிலைமையில் மாற்றத்தை உணர்ந்தவுடன் நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தி வாக்குகளை பெற முயற்சித்தனர். சில தமிழ், முஸ்லிம் மக்கள் எமது வேட்பாளரின் வெற்றிக்காக வாக்களித்துள்ளனர்.
உண்மையாகவே தேசத்தின் மீது பற்றுள்ளவர்களே இவ்வாறு வாக்களித்துள்ளனர். இவர்களை நாம் நினைவில் கொள்வதுடன், பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் ஏகாதிபத்திய வாதிகளுக்கு எதிராக நாம் எமக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைத்து தமிழ், முஸ்லிம் மக்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு எமது எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM