சந்­தி­ரி­காவின் செயற்­பாட்­டினால் சுதந்திர கட்சியின் ஆதரவாளர்களுக்கே தலைகு­னிவு - தயா­சிறி

Published By: R. Kalaichelvan

21 Nov, 2019 | 12:37 PM
image

(செ.தேன்­மொழி)

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தீர்­மா­னத்­துக்கு எதி­ராக முன்னாள் ஜனாதி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க எடுத்த முடி­வினால் சுதந்­திரக் கட்­சியின் ஆத­ர­வா­ளர்­க­ளுக்கே தலை­கு­னிவு ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்த கட்­சியின் பொதுச் செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தயா­சிறி ஜய­சே­கர தேர்தல் பிர­சா­ரங்கள் எவ்­வாறு இடம்­பெற்­றாலும் மக்கள் சிறந்த தீர்­மா­னத்தை எடுத்­துள்­ளனர் என்றும் கூறி­யுள்ளார்.

பத்­த­ர­முல்ல - நெலும் மாவத்­தையில் அமைந்­துள்ள பொது­ஜன பெர­மு­னவின் காரி­யா­ல­யத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் இதனை தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது,

எமது கட்­சியின் தீர்­மா­னத்தை கருத்திற் கொள்­ளாது முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ரவு வழங்கி அவர்­க­ளுடன் இணைந்து செயற்­பட்டார்.

இதனால் என்ன பயன் கிடைத்­தது? எமது கட்சி ஆத­ர­வா­ளர்­க­ளுக்கே தற்­போது தலை­கு­னிவு ஏற்­பட்­டுள்­ளது. அவர் தேர்தல் முடி­வுற்­றதை அடுத்து வெளி­நாடு சென்று விடுவார்.

ஆனால் எமது ஆத­ர­வா­ளர்கள் இங்­குதான் இருக்க வேண்டும். மக்கள் அனை­வரும் கோத்­தாபயவை போன்ற சிறந்த தலை­வரை ஆட்­சியில் அமர்த்­தவே விரும்­பி­யி­ருந்­தனர்.

சந்­தி­ரி­காவின்  இந்த செயற்­பாட்டால் ஏதா­வது மாற்றம் ஏற்­பட்­டதா? அவ­ரது ஆச­ன­மான அத்­த­ன­கல்­ல­விலும்  எமது வேட்­பாளர் கோத்தபாயவே வெற்றிக் கொண்டார்.

தேர்தல் பிர­சா­ரங்­களின் போது யார் எவ்­வா­றான பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்­தாலும் மக்கள் தெளி­வா­கவே இருந்­துள்­ளனர். அதனாலேயே மக்கள் சரி­யான முடிவை எடுத்­துள்­ளனர்.தெற்கில் ஊட­கங்கள் கவ­னத்திற் கொள்­ளாத விட­யங்­களை க்கூட வடக்கு ஊட­கங்கள் பிர­தான செய்­தி­க­ளாக வெளி­யிட்­டி­ருந்­தன. அதனால் வடக்கு, கிழக்கு மக்­களின் எண்­ணங்­களில் மாற்றம் ஏற்­பட்­டன.

இது­வரை காலமும் இருந்த அர­சியல் வர­லாற்றில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தும் வகை­யி­ல் இம்­முறை தலை­வ­ரொ­ருவர் எமக்கு கிடைத்­துள்ளார். எந்த அர­சியல் கட்­சி­க­ளிலும் பங்கு கொள்­ளாத ஒருவர் தற்­போது நாட்­டுக்கு தலை­வ­ராக கிடைக்கப் பெற்­றுள்ளார். அவ­ரது வருங்­கால செயற்­பா­டு­க­ளுக்கு கட்சி பேதங்­களை மறந்து ஒத்­து­ழைப்­புடன் செயற்­ப­டுவோம்.

இதன்­போது கருத்து தெரி­வித்த பிவித்­துரு ஹெல­உறு­மய கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான உத­ய­கம்­மன்­பில  கூறி­ய­தா­வது, எமது வேட்­பாளர் கோத்தாபய ராஜ­ப­க்ஷ­வுக்கு எதி­ராக அர­சாங்­கத்­தினர் 17 பொய்க் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்து வழக்கு தொடுத்­தனர்.

இவர் இலங்கை பிரஜை இல்லை என்றும் இன்னும் அமெ­ரிக்­காவின் குடி­மகன் எனவும் எடுத்துக் காட்­டு­வ­தற்­காக முயற்­சித்­தனர். வெள்ளை வேனில் இளை­ஞர்­களை கடத்தி கொலை செய்­த­தா­கவும், உயிர்த்த ஞாயி­று­ தின தாக்­கு­தல்­களும் இவ­ராலே திட்­ட­மி­டப்­பட்­ட­தா­கவும் எடுத்­துக்­காட்ட முயற்­சித்­தனர்.

ஐக்­கிய தேசியக் கட்சி பொய்­யான பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்த போது நாம் தெற்கில் உள்ள மக்­களை அது தொடர்பில் தெளி­வு­ப­டுத்­தினோம். ஆனால் வடக்கு மக்­களை எம்மால் தெளி­வுப்­ப­டுத்­து­வதில் சிக்­கல்கள் காணப்­பட்­டன.

அவர்­க­ளுக்கு எமது கருத்­து­களை நேர­டி­யாக கொண்டு செல்­வ­தற்­கான வளம் எங்­க­ளிடம் இருக்­க­வில்லை. வடக்கின் அர­சி­யல்­வா­திகள் 13 கோரிக்­கை­களை முன்­வைத்­தனர். கோத்­த­பாய தாம் தோல்வி அடைந்­தாலும் தம்மால் அதற்கு ஆத­ரவு வழங்க முடி­யாது என்று மறுப்பு தெரி­வித்­தி­ருந்தார். 

நாட்­டுக்கு முன்­னு­ரிமை கொடுத்­ததன் கார­ண­மா­கவே கோத்­தாபயவை மக்கள் தெரிவு செய்­துள்­ளனர்.

வாலால் சிங்­கத்தை ஆட்­டி­வித்த காலம் மாறி தற்­போது சிங்­கத்தால் வாலை ஆட்­டிவைக்கும் காலம் உதயமாகியுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியினரும் தற்போது பின்னடைவையே கண்டுள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்கமைய பார்க்கும் போது எதிர்வரும் பொதுத் தேர்தலில் இவர்களால் ஒரு உறுப்புரிமையை மட்டுமே பாதுகாத்துக் கொள்ள கூடியதாக இருக்கின்றது.

ஐக்கிய தேசியக்  கட்சியுடன் நாட்டை காட்டிக் கொடுக்கும் ஒப்பந்தங்களுக்கு உதவியமையினாலேயே மக்கள் அவர்களுக்கு இவ்வாறான பதிலடியை கொடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50