பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற அமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மனோ கணேசனுக்கும் லக்ஷ்மன் கிரியெல்லவுக்குமிடையில் கடும் வாக்குவதாம் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தின்போது ஐக்கிய தேசியக் கட்சி கண்டியில் தோல்வி அடைய மத்திய அதிவேக வீதி நிர்மாணத்தில் ஏற்பட்ட தாமதமே காரணமென அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து லக்ஷ்மன் கிரியெல்லவின் கருத்தை நிராகரித்த அமைச்சர் மனோ கணேசன், மத்திய அதிவேக வீதி நிர்மாண தாமதம் தோல்விக்குக் காரணமல்ல என்றும் நீங்கள் கண்டியில் தேர்தல் பிரசாரப் பணிகளில் முறையாக ஈடுபடாதது தோல்விக்கு காரணம் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இதனையடுத்து இரண்டு பேருக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. தான் கண்டி மாவட்டத்தில் அனைத்துப் பிரதேசங்களிலும் ஒழுங்கான முறையில் பிரசாரங்களை முன்னெடுத்ததாகவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருக்கிறார்.
எனினும் தேர்தல் முடிவுகளின் பின்னர் மலையகப் பகுதிகளில் தமிழ் மக்கள் தாக்கப்படுவதாகவும் அது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மனோ கணேசன் இதன்போது தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை தோட்டப்பகுதிகளில் தமிழர்கள் தாக்கப்படுவது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற அனுமதிக்கக் கூடாது என்றும் அமைச்சர் மனோ கணேசன் இந்தக் கூட்டத்தின்போது வலியு றுத்தியிருக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM