மனோ கணேசனுக்கும் லக்ஷ்மன் கிரி­யெல்லவுக்கும் இடையில் முரண்­பாடு ; கடும் வாக்­கு­வாதம்

Published By: Daya

21 Nov, 2019 | 11:52 AM
image

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் அலரி மாளி­கையில் நேற்று நடை­பெற்ற அமைச்­சர்கள் மற்றும் கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் மனோ கணே­ச­னுக்கும் லக்ஷ்மன் கிரி­யெல்­ல­வுக்­கு­மி­டையில் கடும் வாக்­கு­வதாம் இடம்­பெற்­றுள்­ளது.

இந்தக் கூட்­டத்­தின்­போது ஐக்­கிய தேசியக் கட்சி கண்­டியில் தோல்வி அடைய மத்­திய அதி­வேக வீதி நிர்­மா­ணத்­தில் ஏற்­பட்ட தாம­தமே கார­ண­மென அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்­தி­ருக்­கிறார்.

இத­னை­ய­டுத்து லக்ஷ்மன் கிரி­யெல்­லவின் கருத்தை நிரா­க­ரித்த அமைச்சர் மனோ கணேசன், மத்­திய அதி­வேக வீதி நிர்­மாண தாமதம் தோல்­விக்குக் கார­ண­மல்ல என்றும் நீங்கள் கண்­டியில் தேர்தல் பிர­சாரப் பணி­களில் முறை­யாக ஈடு­ப­டா­தது தோல்­விக்கு காரணம் என்றும் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.

இத­னை­ய­டுத்து இரண்டு பேருக்­கு­மி­டையில் கடும் வாக்­கு­வாதம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. தான் கண்டி மாவட்­டத்தில் அனைத்துப் பிர­தே­சங்­க­ளிலும் ஒழுங்­கான முறையில் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்த­தா­கவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்­தி­ருக்­கிறார்.

எனினும் தேர்தல் முடி­வு­களின் பின்னர் மலை­யகப் பகு­தி­களில் தமிழ் மக்கள் தாக்­கப்­ப­டு­வ­தா­கவும் அது குறித்தும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை என்றும் மனோ கணேசன் இதன்­போது தெரி­வித்­தி­ருக்­கிறார்.

இதே­வேளை தோட்­டப்­ப­கு­தி­களில் தமி­ழர்கள் தாக்­கப்­ப­டு­வது தொடர்பில் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என்றும் அவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற அனுமதிக்கக் கூடாது என்றும் அமைச்சர் மனோ கணேசன் இந்தக் கூட்டத்தின்போது வலியு றுத்தியிருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08