தேர்தல் தினத்தன்று கடத்தப்பட்ட 20 வயது யுவதி பொலிஸாரால் மீட்பு

Published By: J.G.Stephan

21 Nov, 2019 | 11:45 AM
image

நிக்கவரெட்டி பிரதேசத்தில் கடந்த தேர்தல் தினத்தன்று கடத்திச் செல்லப்பட்ட 20 வயதுடைய யுவதி ஒருவர் பொல்பித்திகம பிரதேச வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவ்யுவதியுடன் இரு சந்தேகநபர்களை கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேனுடன் நேற்று முன்தினம் கைது செய்துள்ளதாக நிக்கவரெட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பன்பொல பிரதேசத்தைச்  சேர்ந்த குறித்த யுவதி கொழும்பு பிரதேசத்தில் தொழில் செய்து வருபவர் என்றும், கடந்த 16ஆம் திகதி வாக்களிப்பதற்காக வீட்டுக்கு வந்து பின்னர் நிக்கவரெட்டி இஹலகம பிரதேசத்தில் வசிக்கும் தனது சகோதரியின் வீட்டுக்குச் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டடுள்ள சந்தேகநபர்கள் அவ்வீட்டுக்குச் சென்று வேன் ஒன்றில் அவ் யுவதியைக் கடத்திச் சென்றதாக குறித்த யுவதியின் சகோதரியினால் நிக்கவரெட்டி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் அம்பன்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர், குறித்த யுவதியின் முன்னை நாள் காதலர் என்றும், மாஹோ பிரதேசத்தில் வாடகைக்குப் பெறப்பட்ட வேனில் இரண்டு நண்பர்களின் ஒத்துழைப்போடு அவ் யுவதியைக் கடத்திச் சென்றுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட யுவதி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் மற்றும் வேனின் சாரதி ஆகியோரை நேற்று முன்தினம் நிக்கவரெட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்த நிக்கவரெட்டி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15