(தி.சோபிதன்)
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் மேற்கொண்ட சதியினாலேயே சஜித் பிரேமதாச தோற்கடிக்கப்பட்டிருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துக்களை தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நீங்கள் இவ்வளவு தூரம் போராடியும் 13 இலட்சம் வாக்குகளால் கோத்தபாய வெற்றி பெற்றுள்ளார். இவ்வாறு வெற்றி பெற்ற நிலையில் தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்த வேலை இராஜதந்திரமா? ஒருவிடயத்தில் தோல்வி ஏற்பட்டால் இரண்டாவது திட்டமிடல் இருக்க வேண்டும்.இவர்களிடம் அப்படி ஏதும் இருந்ததாக இல்லை. அதனை எதிர்பார்க்க முடியாது.
கூட்டமைப்பு சஜித்தை ஆதரிப்பது என்பது திட்டம் என்றால் சஜித் வெற்றி பெறாவிட்டால் அடுத்த திடடம் என்ன என்று ஏதும் வைத்திருந்தீர்களா. என்னைப் பொறுத்தவரையில் அநியாயம் செய்பவர்கள் இரண்டு பேருமே என்று கூறியிருந்தோம். யார் வந்தாலும் எங்களுக்கு பிரச்சினையில்லை. எதற்கும் நாங்கள் தயார். ஆக வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழ் மக்களாக இருக்க வேண்டுமென்ற அடிப்படையில் நாங்கள் எங்கள் மக்களுக்கு எங்களை நாங்களே ஆளக் கூடிய தீர்வை எடுத்துக் கொடுப்பதற்கு அதாவது அத்தனை பேரும் கட்சி பேதங்களைக் கடந்து தமிழன் என்ற உணர்வோடு வீறு நடைபோட வேண்டும்.
தேர்தல் பரப்புரை ஆரம்பத்தில் சிங்கள பௌத்த இனவெறிக் கூச்சல் உச்சக் கட்டத்தில் இருக்கும் போது கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக ஆதரவைக் கொடுத்தால் ஆதரவு கொடுக்கும் தரப்பிற்கு அது தென்னிலங்கையில் பாரிய வாக்கு வங்கியை வீழ்ச்சியடைச் செய்யும் என்று பலர் நம்பினார்கள். அதிலே உண்மையும் இல்லாமல் இல்லை. அது தான் கள நிலைவரம். அதுதான் உண்மை.
அவ்வாறான நிலைப்பாட்டில் இருந்த கூட்டமைப்பினர் குறிப்பாக தமிழரசுக்கட்சியினர் இங்கே நடைபெற்ற கிராம மட்டகருத்தரங்குகளிலே நாங்கள் பகிரங்கமாகச் சொல்ல முடியாது என்றும் நீங்கள் கீழ் மட்டத்தில் வேலை செய்யுங்கள் என்றும் மக்களிடம் சொன்னவர்கள் திடீரென்று வவுனியாவிலே தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கூட்டப்பட்டு அதுவும் கூட்டமைப்பின் மூன்று கட்சிகளைக் கூட அழைத்து பேசாமல் தாமாக அவசரமாக அறிவித்ததன் பின்னணி என்ன--?
நிலைமைகள் இவ்வாறிருக்கையில் சஜித் பிரேமதாச விட்ட தவறு என்னவென்றால் நான் ஒரு புதிய பிரதமரை நியமிப்பேன் என்று கூறியது தான். அதனோடு ரணில் விக்கிரமசிங்க அலேட் ஆகிவிட்டார். அவர் அரசியலில் ஒருநரி. நரித்தந்திரம் கொண்டவர். ஆக அந்த ஐயா சொல்லி எங்கட ஐயா சேர்ந்து தான் இதனைச் செய்திருக்கிறார்கள்.இதற்கு பணப்பட்டுவாடா நடந்ததாக சொல்லப்படுகிறது.
கூட்டமைப்பு இப்பொழுது இந்த நிலைக்கு தமிழர்களை கொண்டு வந்து விட்டுள்ளது. கோத்தா, மஹிந்த, ரணிலோடு சேர்ந்து தீர்வைக் கொண்டு வாருங்கள். நாங்கள் சந்தோசப்படுகிறோம். அது உங்கள் இராஜதந்திரம் என்றால் நாங்கள் ஆதரிக்கிறோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM