(ரொபட் அன்டனி)
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபகஷ இன்று இலங்கையின் புதிய பிரதமராக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவினால் நியமிக்கப்படவிருக்கிறார்.
இன்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்த பின்னர் புதிய பிரதமர் நியமனம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.
இதன்போது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படுவதுடன் அதனைத் தொடர்ந்து எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக 15 பேர் கொண்ட அமைச்சரவை ஒன்றும் நியமிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச பதவியேற்றுக் கொண்ட பின்னர் பிரதமர் நியமனம் தொடர்பில் ஆராயப்பட்டு வந்தது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவருமான தினேஸ் குணவர்த்தனவை பிரதமராக நியமிக்கலாம் என மஹிந்த ராஜபக்ஷ தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டது.
எனினும் மஹிந்த ராஜபக்ஷவையே பிரதமராக நியமிக்க வேண்டும் என்றும் அவரை பிரதமராக நியமிப்பதற்கே மக்களின் ஆணை கிடைத்துள்ளதாகவும் மஹிந்த தரப்பு எம்.பி.க்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையிலேயே இன்றைய தினம் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இன்றைய தினமே எதிர்வரும் மூன்று மாதங்களுக்கான இடைக்கால அரசாங்கத்துக்கான 15 அமைச்சர்களும் நியமனம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக மஹிந்த தலைமையிலான கூட்டணியின் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அதேபோன்று ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா, இ.தொ.க. தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோருக்கும் அமைச்சுப் பதவிகள் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ நியமனம் பெற்றதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தான் பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்திருந்தார். எனினும் பல்வேறு தரப்பினரின் வலியுறுத்தலின் பின்னர் இன்றைய தினம் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்திருக்கிறார். அதனடிப்படையிலேயே இன்றைய தினம் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM