மோட்டார் சைக்கிள் ஒன்றில் மூவர் பயணித்தபோது சைக்கிளை செலுத்தியவர் அதிவேகமாக சென்றதில் மதில் ஒன்றில் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளான சம்பவமொன்று இன்று (20) இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை சந்தை வீதியிலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்து தொடர்பில் தெரியவருவதாவது,
மோட்டார் சைக்கிள் ஒன்றில் மூன்று இளைஞர்கள் ஓட்டமாவடி பகுதிலிருந்து மீராவோடை நோக்கி குறித்த வீதியில் அதிவேகமாக பயணித்ததில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மதில் ஒன்றில் மோதியுள்ளது.
இதனால் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் பலத்த காயங்களுக்குள்ளாகி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பாட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரும் தலைக்கவசம் இன்றி பயனித்துள்ளதாகவும், மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞனுக்கு தலைப்பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM