Published by T. Saranya on 2019-11-20 14:07:41
மறைந்த முன்னாள் பிரதமர் தி.மு. ஜயரத்னவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை (23.11.2019) கம்பளையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் தி.மு. ஜயரத்ன உடல்நலக் குறைவு காரணமாக கண்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் தனது 88 ஆவது வயதில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.