மக்கள் ஆணைக்கு மதிப்பளித்தாலும் ஜனாதிபதி கோத்தாபயவை ஏற்க போவதில்லை  - குமார வெல்கம 

Published By: Vishnu

20 Nov, 2019 | 12:01 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டு மக்கள் கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளமையை மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து ஏற்றுக் கொள்கின்ற போதிலும், அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலைப்பாட்டில் தான் உறுதியாக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். 

கடந்த காலங்களில் நான் அவர் மீது வெளியிட்ட அதிருப்தி நிலைப்பாட்டிலிருந்து மாறவில்லை. என்னுடைய அந்த முடிவில் நான் உறுதியாக இருக்கின்றேன். இதற்கான காரணங்கள் ஏற்கனவே பல முறை என்னால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. எவ்வாறிருப்பினும் தற்போதைய அரசியல் சூழ்நிலைகளை நன்கு அவதானித்து எமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடரும்.

அரசியலமைப்பின் படி அடுத்த வருடம் மார்ச் மாதம் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கிறது. அது குறித்து எமது நிலைப்பாடு என்று எதுவும் இல்லை. எனினும் அதற்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைப்பதென்றால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறப்பட வேண்டும். 

2020 மார்ச் மாதத்துக்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு மூன்றில் பெரும்பான்மை கோரப்பட்டால் அதற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்தாலோசித்தே தீர்மானிக்க முடியும் என்று அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20