29 ஆம் திகதி இந்தியா செல்கிறார் ஜனாதிபதி

Published By: Digital Desk 3

20 Nov, 2019 | 09:50 AM
image

(ரொபட் அன்டனி)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் 29 ஆம் திகதி  இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்றே  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ இவ்வாறு இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

நேற்று மாலை இலங்கை வந்த இந்திய வெளியுறவு அமைச்சர்   ஜெய்சங்கர்  இந்திய பிரதமர் மோடியின்  அழைப்பு கடிதத்தை  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம்  கையளித்தார்.  

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை  இந்திய இந்திய வெளியுறவு அமைச்சர்   ஜெய்சங்கர்   ஜனாதிபதி கோத்தாபயவை சந்தித்து பேச்சு நடத்தியபோது      புதிய ஜனாதிபதிக்கு வாழ்தது தெரிவித்ததுடன்    பிரதமர் மோடியின் அழைப்புக் கடிதத்தையும்   கையளித்தார்.

அதன்படி இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி  கோத்தாபய ராஜபக்ஷ எதிர்வரும் 29  ஆம் திகதி  இந்தியாவுக்கு விஜயம் செய்வதாக  உறுதியளித்தார்.

இந்த விஜயத்தின்போது  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ  இந்திய பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத்  கோவிந்த் மற்றும்  முக்கிய அமைச்சர்களையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இதன்போது  இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது  தொடர்பாகவும் விரிவாக பேசப்படவுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45