இந்தியாவில் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் 65 கிலோ மீற்றர் தூரம் ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பித்தோலியில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பதில் பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் விஜய் பிரதாப். திடீரென இவரை, பணிபுரிந்த பொலிஸ் நிலையத்திலிருந்து 65 கிமீ தொலைவில் உள்ள மற்றொரு பொலிஸ் நிலையத்திற்கு உயரதிகாரிகள் மாற்றம் செய்தனர்.
இந்த பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவர் பணிபுரிந்த பொலிஸ் நிலையத்திலிருந்து, புதிதாக பணியிடமாற்றம் செய்யப்பட்ட பொலிஸ் நிலையத்திற்கு ஓடிச் சென்றார்.
கடும் பனியிலும், குளிரிலும் நீண்டதூரம் ஓடியதால் களைப்படைந்த அவர் மயக்கம் அடைந்தார். இதையடுத்து அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
"எதற்கு நீங்கள் இவ்வளவு தூரம் ஓடி வந்தீர்கள்..?" என, செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, "இதை, எனது கோபம் அல்லது அதிருப்தி என்று நீங்கள் குறிப்பிடலாம். ஆனால், உயரதிகாரிகளின் சார்வாதிகாரப் போக்கை சுட்டிக்காட்டும் வகையில்தான் இவ்வாறு செயல்பட்டேன்" என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM