முல்லைத்தீவு மாவட்டத்தில் 107 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

Published By: Daya

19 Nov, 2019 | 02:52 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 107 வரையான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள தாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு நோயின் தாக்கம் காணப்படுகின்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் தொடர்பில் மேற்படி சுகாதார சேவைகள் திணைக்களத்திடம் தொடர்பு கொண்டுகேட்டபோது முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்தாண்டில் இதுவரையான காலப்பகுதியில் 107 வரையான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்கள் கொழும்பு மற்றும் வெளிமாவட்டங்களுக்கு தொழில் நிமித்தம் சென்று வந்தவர்கள் அல்லது வெளிமாவட்டங்களிலிருந்து  வந்தவர்களாவே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளதுடன், கடந்த ஆண்டில் நூறு பேர் வரையிலும் 2017ஆம் ஆண்டில் 170 இற்கும் மேற்பட்டோர் இனங்காணப்பட்டும் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன எனவும் மேற்படி பணிமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை தற்போது டெங்கு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து தொழில்களின் நிமித்தம் வெளிமாவட்டங்களுக்கு சென்று வருபவர்களும் வெளிமாவட்டங்களிலிருந்து தொழில்கள் கருதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தந்தவர்களுமே ஏற்கெனவே டெங்கு நோய்த்தாக்கத்திற்குள்ளாகி முல்லைத்தீவு மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுள்ளமை தொடர்பில் இதுவரை 107 பேர் வரையில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08